சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை இப்போது விலகும் நிலையை எட்டியுள்ளது. இயல்பான அளவிலேயே மழை பெய்த இந்த பருவம், இன்று (ஜனவரி 17) அல்லது நாளைக்குள் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து முழுமையாக விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், இன்று முதல் ஜனவரி 22-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இருப்பினும், கனமழைக்கு வாய்ப்பில்லை.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை ஒட்டிய அளவில் மழை தந்துள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் இந்த மழையால் பயனடைந்தனர். இப்போது பருவமழை விலகுவதால், குளிர்கால வானிலை தொடங்கி, பனி மற்றும் குளிர் சற்று அதிகரிக்கக்கூடும்.
இதையும் படிங்க: 48 மணி நேரம் தான்! End card போட்டது வடகிழக்கு பருவமழை!! இன்று எங்கெல்லாம் மழை!
பொதுமக்கள் பனிமூட்டத்தில் பயணம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அடுத்த சில நாட்களில் வெப்பநிலை சீராக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! இன்று மாலைக்குள் கரையை கடக்கும்!! வெதர் அப்டேட்!!