பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில்தான் ஆப்கானிஸ்தானிடம் பாகிஸ்தான் ராணுவ தளபதி இந்தியாவை குறிப்பிட்டு ஒரு முக்கியமான கோரிக்கையை வைத்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஏப்ரல் 22 ஆம் தேதி துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு நம் நாடு ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள், ராணுவ தளங்கள், விமான தளங்கள் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் நிலை குலைந்த பாகிஸ்தான் நம் நாட்டிடம் சரணடைந்தது.
பாகிஸ்தானின் ராணுவ அதிகாரி நம் நாட்டை தொடர்பு கொண்டு மோதலை நிறுத்துங்கள். எங்களால் தாங்க முடியவில்லை. தாக்குதலை சீக்கிரமாக நிறுத்த வேண்டும் என கெஞ்சினார். இதனை அடுத்துதான் நம் நாடு மோதலை நிறுத்துவதாகவே அறிவித்தது. இதன் மூலம் கடந்த மே 7ம் தேதி தொடங்கிய மோதல் மே 10ஆம் தேதி முடிவுக்கு வந்தது. மோதலில் தோற்றாலும் கூட மீசையில் மண்ணோட்டவில்லை என்பது போலத்தான் பாகிஸ்தான் வெற்றி வெற்றி என சொல்லிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி நம் நாட்டுக்கு எதிராக பொய்களை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது பாகிஸ்தான்.

அந்த வரிசையில் பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி அசிம் முனிர் நம் நாட்டுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகளுக்கான 52வது காமன் ட்ரைனிங் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் அசி முனிர் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது நம் நாட்டின் மீது வழக்கம் போல விஷத்தை கக்கி இருக்கிறார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலமாக நம் நாட்டிடம் மண்டியிட்டதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார் அசிம் முனீர். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால் நம் நாட்டின் சகோதர இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் நட்புறவை விரும்புகிறது. ஆப்கானிஸ்தான் இந்தியாவால் ஆதரிக்கப்படும் பயங்கரவாத குழுக்களான பிட்னா அல் ஹிந்துஸ்தான் மற்றும் பிட்னா அல்வாரிஜ் ஆகியவற்றிற்கு இடம் கொடுக்க கூடாது என்று எதிர்பார்க்கிறோம்.

இதையும் படிங்க: பாக்.-கிற்கு உளவு பார்த்திருக்கீங்க.. பணம் கொடுக்கலனா ஜெயில் தான்.. சைபர் மோசடியில் ரூ.22 லட்சம் இழந்த பெண்..!
இந்தியா இந்த பகுதியில் பயங்கரவாதத்தின் மிகப்பெரிய ஆதரவாளராக உள்ளது. பாகிஸ்தான் ஒருபோதும் இந்தியாவின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளாது. இந்தியாவின் முன்பு நாம் ஒருபோதும் தலை வணங்கவில்லை. எதிர்காலத்திலும் தலை வணங்க மாட்டோம். இந்தியாவில் உள்நாட்டு பிரச்சனை உள்ளது.சிறுபான்மையினருக்கு குறிப்பாக இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறைகள் நடக்கிறது. இந்தியாவில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பொய் பொய்யாக பேசியிருக்கிறார் பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் முனிர். பாகிஸ்தான் மதத்தின் அடிப்படையில் தனி நாடாக நம்மிடமிருந்து பிரிந்து சென்றது. இப்போது இஸ்லாமிய நாடாகவே அது அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆனால் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் மற்றும் ஷியாக்கள், அகமதிக்கள் போன்றோர் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தான் எப்போதும் பயங்கரவாதத்தின் பக்கம் தான் நிற்கிறது. அங்கு இருக்கக்கூடிய சிறுபான்மை மக்கள் எந்த அளவுக்கு கொடூரமாக தாக்கப்படுகிறார்கள். அவர்களது புனித தளங்கள் எவ்வாறு தாக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பது அவ்வப்போது வீடியோக்களாக கூட வெளியாகி கொண்டிருக்கிறது. அங்கு இருக்கக்கூடியவர்கள் எப்படி கட்டாய மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்பது கூட வீடியோவாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் எப்போதும் பயங்கரவாதத்தின் பக்கம் தான் இருக்கிறது.
இந்தியாவை குறிவைக்கும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் வளர்த்துவிட்டு அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருப்பது அனைவருக்குமே தெரியும். இதற்கு சமீபத்திய பகல்காம் தாக்குதல் உட்பட பல தாக்குதல்களை நாம் எடுத்துக்காட்டாக சொல்லலாம். ஆனால் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசி முனிர் நம் நாட்டின் மீது அபாண்டமாக பழி சுமத்தி உள்ளார். மேலும் இந்தியா ஆப்கானிஸ்தானை எடுத்துக்கொண்டால் நல்ல உறவு இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பிரச்சனை இருக்கிறது. இரண்டு நாடுகளும் எல்லையை பகிர்ந்து கொள்ளும் நிலையில் மோதல் நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. எல்லையில் தகிரி தாலிபான்கள் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டி அடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அங்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை சமாளிக்க முடியாத கோழையான பாகிஸ்தான் தனது ராணுவ தளபதி மூலமாக தற்போது நண்பனாக பார்ப்பதாக ஆப்கானிஸ்தானை சமாதானப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என்னை மீறி தொடுடா பாக்கலாம்.. ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான்.. இஸ்ரேலுக்கு எச்சரிக்கை..!