தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 அளவில் கூடியது. அதற்கு முன்னதாக பாமக அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகர் அப்பாவை சந்தித்தனர். பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே மணியை நீக்க கோரி அன்புமணி தரப்பினர் ஏற்கனவே மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் தங்களது மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சபாநாயகரிடம் கேட்டறிந்தனர். சட்டமன்ற குழு தலைவராக வெங்கடேஸ்வரன் என்பவரை தாங்கள் நியமித்துள்ளதாகவும் ஜி.கே மணியை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே கடிதம் கொடுத்திருந்த நிலையில் மீண்டும் நினைவூட்டல் கடிதத்தை கொடுத்துள்ளனர். பாமக எம்எல்ஏ அருளை நாங்கள் நீக்கி உள்ளதால் மீதமுள்ள மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் அன்புமணிக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். எனவே தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இதையடுத்து பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைகளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு ஜி.கே. மணி மற்றும் அருள் ஆகியோர் சபாநாயகர் அப்பாவை அவரது அறையில் சந்தித்தனர். சட்டமன்ற குழு தலைவர், கொறடா பொறுப்புகளில் இருந்து தங்களை நீக்க கூடாது என்று சபாநாயகர் இடம் முறையிட்டனர். பாமகவின் கொறடா தாம் தான் என சேலம் அருள் சபாநாயகர் இடம் வலியுறுத்தினார். தொடர்ந்து பாமக எம்எல்ஏக்கள் அருள் மற்றும் ஜிகே மணி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதையும் படிங்க: அன்புமணி தரப்பால் ராமதாஸுக்கு அச்சுறுத்தல்... தலைமைச் செயலாளரிடம் முறையிட்ட எம்எல்ஏக்கள்...!
அப்போது பேசிய ஜி.கே. மணி, கட்சியின் முழு அதிகாரம் ராமதாசிடம் மட்டும் தான் உள்ளது என்றும் தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டில் வளர்ச்சிக்காகவும் மக்களுக்காகவும் போராடும் என்றும் ஆனால் கட்சிக்குள்ளேயே போராடுகிறது என்பது வினோதமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாமக எம்.எல்.ஏ அருளுக்கு புதிய பதவி.. ராமதாஸ் அதிரடி உத்தரவு..!!