புரட்சி பாரதம் கட்சியின் தலைவரான பூவை ஜெகன் மூர்த்தி, 2006இல் அரக்கோணம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 2021இல் கே.வி.குப்பம் தொகுதியில் வெற்றி பெற்றார். கே.வி.குப்பம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த வருகிறார். இந்த நிலையில், காதல் திருமணம் செய்து வைத்தது தொடர்பான ஆள் கடத்தல் வழக்கு குறித்து விசாரிப்பதற்காக போலீசார் சென்றனர். இதனால் அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது.

பிறகு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று எம்எல்ஏ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் அடுக்கடுக்கான கேள்விகளை உயர்நீதிமன்றம் முன் வைத்தது. இந்த நிலையில், ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைப்பார் என்றும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அரசியல் காரணங்களால் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த நாள் வரை தன்மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்றும் பூவை ஜெகன் மூர்த்தி தரப்பில் வாதாடப்பட்ட நிலையில், நீங்கள் அரசியலில் இருப்பதால் ஒருவேலை யாரும் புகார் அளிக்காமல் இருந்திருக்கலாம் நீதிபதி தெரிவித்தார்.வழக்கு விசாரணைக்கு சரி வர ஒத்துழைப்பு அளிக்காததால் அவருக்கு ஜாமின் கொடுக்க கூடாது என்று போலீசார் தரப்பில் வாதிடப்பட்ட நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது.

அப்போது, ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. ஆள் கடத்தல் வழக்கில் முன்ஜாமின் கேட்டு எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த ஆணையை பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா கோடீஸ்வர் சிங் அமர்வு எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. 25 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை கட்டி ஜாமீன் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவு? 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை..!
இதையும் படிங்க: வெளிய விட்டா சாட்சியை கலைத்து விடுவார்! MLA ஜெகன் மூர்த்தி ஜாமீன் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்!