தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TNTET 2026), புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர்களும் பங்கேற்க அனுமதி வழங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இந்தத் தேர்வை எழுத அனுமதி கோரி அம்மாநிலப் பள்ளிக்கல்வித் துறைச் செயலர் தமிழக அரசிற்குத் தூது அனுப்பினார்.
புதுச்சேரி அரசின் இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், தற்போது அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்,
இதையும் படிங்க: "திமுக முடிவே எங்களது முடிவு": விஜய்யின் ஆதரவு கோரிக்கைக்குக் காதர் மொய்தீன் பதில்!

விண்ணப்பத் தொடக்கம்: மே 13, 2026
விண்ணப்பிக்க இறுதி நாள்: மே 27, 2026
இணையதளம்: www.trb.tn.gov.in என்ற முகவரியில் தாள்-I மற்றும் தாள்-II ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி ஆசிரியர்கள் தமிழகத் தேர்வு வாரியம் நடத்தும் இந்தச் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்கலாம். இத்தேர்வில் புதுச்சேரி ஆசிரியர்கள் பெறும் மதிப்பெண்கள், உரிய முறையில் புதுச்சேரி அரசிற்குத் தேர்வுக் குழுவால் வழங்கப்படும். தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்தச் சிறப்புச் சலுகை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் தமிழக ஆசிரியர்களுக்கு இடையேயான கல்விசார் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் இந்த நடவடிக்கை, ஆசிரியர்களின் தகுதியை உறுதி செய்வதில் ஒரு முக்கியக் கட்டமாகப் பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் விரிவாகக் காணலாம்.
இதையும் படிங்க: விஜய் போனில் அழைத்து ஆதரவு கேட்டார் - விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேட்டி!