தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த மொபைல் கடை வியாபாரிகளான தந்தை பி. ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜெ. பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் கொடூர தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கடை நேரத்தை மீறி செயல்பட்டதாகக் கூறி சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் இருவரையும் அழைத்துச் சென்றனர். பிறகு மறுநாள் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் கடுமையான தாக்குதலால் படுகாயங்களுடன் இருந்ததாகவும், இரத்தக் காயங்கள், உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும் பதிவாகியது. ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். உடற்கூறாய்வு அறிக்கையில், இருவரது உடல்களிலும் 70க்கும் மேற்பட்ட காயங்கள், உள் ரத்தக்கசிவு, எலும்பு முறிவுகள் போன்றவை இருந்ததாகத் தெரியவந்தது.
இது தெளிவாக காவல் துறையினரின் கொடூர தாக்குதலால் ஏற்பட்ட மரணம் என்பதை உறுதிப்படுத்தியது. இச்சம்பவம் வெளியானதும் தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன. மதுரை மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணை எடுத்தது. உடற்கூறாய்வு வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டது. முதலில் போலீஸ் விசாரணை நடத்தியபோதிலும், பெரும் அழுத்தத்தால் முதலமைச்சர் உத்தரவின்பேரில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது கொலை, சதி, ஆதார அழிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 9 போலீசும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. தண்டனை விவரங்கள் இன்று வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், சாத்தான் குளத்தில் தந்தை ஜெயராஜ், மற்றும் மகன் பெனிக்சை போலீசார் அடித்துக் கொன்ற வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகு உட்பட ஒன்பது போலீசுக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: +2 மாணவி கொடூர கொலை சம்பவம்... சிபிஐ விசாரணை தேவை... கோர்ட்டில் முறையீடு..!!
மத்திய, மாநில அரசுகளின் அறிக்கை கிடைக்காததால் தண்டனை அறிவிப்பை ஹைகோர்ட் கிளை ஒத்தி வைத்துள்ளது. அரசுகளின் அறிக்கைகள் என்ன ஆனது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தண்டனை பரிந்துரை குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து இதுவரை அறிக்கை வரவில்லை என்று நீதிபதி தெரிவித்தார். 9 பேருக்கும் தூக்கு தண்டனையா? ஆயுள் தண்டனையா? வாழ்நாள் சிறை தண்டனையா? என முடிவெடுக்கவே அறிக்கை கேட்பதாக நீதிபதி தெரிவித்தார். 23ஆம் தேதி என்று கூறியும் ஏன் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் எந்த கருத்தாக இருந்தாலும் அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள் என்றும் நீதிபதி தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய மாலை 4:30 மணிவரை அவகாசம் வழங்கி ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டது.
இதையும் படிங்க: உடலை வைத்துப் போராடுவது FASHION ஆகிடுச்சு... அரசியல் செய்யாதீங்க... உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை..!!