2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.
பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர். தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரச்சாரம் நடத்தி வருகிறார்.

தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் விஜய் ஒரே ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டு வருகிறார். அதுமட்டுமல்லாது திமுக குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். சமீபத்தில் நாம் தமிழர் கட்சியை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: சிவன் கொடுத்தால் ஏற்கிறீர்கள்? சீமான் கொடுத்தால் எதிர்க்கிறீர்கள்?... பஞ்ச் டைலாக் பேசி பட்டையைக் கிளப்பிய சீமான்...!
இது தொடர்பாக சீமான் விமர்சனம் செய்துள்ளார். தவெகவிற்கும் திமுகவிற்கும்தான் போட்டி என்கிறார் விஜய். ஆனால், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி தொகுதிக்கு பரப்புரை செய்ய விஜய் போகவில்லை என்று கூறினார். கொள்கை எதிரி என்று கூறும் அவர், பாஜக தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பரப்புரை செய்யவில்லை நேரடியாக என்னுடைய தொகுதிக்கு வருகிறார் என்று கூறினார். அப்படி என்றால் யாருக்கு போட்டியாக பரப்புரை செய்கிறார் என்று சீமான் கேட்டு உள்ளார்.
இதையும் படிங்க: இலவச பிரிட்ஜ்-ல குடுக்குறவங்க கை, கால்களை வெட்டி வைப்பதா..? சீமான் சரமாரி கேள்வி..!