கீழடி விவகாரம் தொடர்பாக திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவு ஒன்று போடப்பட்டுள்ளது. அதில், வாயை திறந்து பேசுங்கள் பழனிச்சாமி என்றும் பல்லாயிரமாண்டு வரலாறுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும் போர்குரல் எழுப்பிவரும் நிலையில், தினமும் அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை அரசியல் செய்து வரும் பழனிசாமியின் கண்களுக்கு இதெல்லாம் தெரியவில்லையா? இல்லை எஜமானர் பழைய வழக்குகளையெல்லாம் தூசிதட்டி எடுத்துவிடுவார் என்ற பயமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. அது மட்டும் அல்லாமல், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அரைகுறை ஆடையில் இருப்பது போன்ற ஒரு போஸ்டரை தயாரித்து கீழடியாவது, தாய்மடியாவது நமக்கு எப்பவுமே டாடி மோடி மடிதான் என்று வாசகங்களை எழுதி வெளியிட்டுள்ளனர்.

இதற்கு அதிமுக மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவும், டிஆர்பி ராஜாவும், அதை பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்டாலினும் தமிழகத்துக்கு சாபக்கேடு. உங்கள் அப்பா வயதில் இருக்கும் ஒருவரை, முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவரை கேவலமாக சித்தரித்து ஒரு கார்டுன் உருவாக்கி அதனை ஐடி விங் அதிகாரப்பூர்வ பக்கத்தில் போடுகிறீர்கள். நான் டிஆர்பி ராஜாவை பார்த்து கேட்கிறேன்., உங்கள் அப்பா டி.ஆர் பாலுவை இப்படி சித்தரித்து போட்டால் ஏற்றுக்கொள்வீர்களா, ஸ்டாலினை இப்படி சித்தரித்து போட்டால் ஏற்றுக்கொள்வீர்களா அல்லது உங்கள் கட்சியில் உள்ள 70 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களை இப்படி சித்தரித்து கார்டூன் போட்டால் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

ஒரு கட்சி என்றால், கருத்து முன்வைக்கப்பட்டால் அதற்கு எதிர் கருத்து முன்வைக்கப்பட வேண்டும்., மக்களுக்கு தேவையான ஆக்கபூர்வமான கருத்துக்கள் முன்வைக்கப்பட வேண்டும்., அவனே இவனே இன்று பேசுவதற்காக இருக்கக் கூடாது. இதையெல்லாம் எங்கிருந்து திமுகவிடம் எதிர்பார்க்க முடியும். கூட்டணியில் இருக்கும் காங்கிரசைச் சேர்ந்த இந்திரா காந்தியையே காது கூசும் அளவிற்கு விமர்சித்தவர் கருணாநிதி என்று தெரிவித்தார். வெட்கம், மானம், சூடு சொரணை உள்ளவர்களாக இருந்தால், சோற்றில் உப்பு போட்டு தின்பவர்களாக இருந்தால் சொல்லுங்கள்., 50 வயது இருக்கும் ஒரு ஆள் 14 வயது பெண்ணை காலை உடைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் அதற்கு போடுங்கள் கார்டூனை., மூன்று முறை மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது., உங்கள் அமைச்சரவையில் இருந்து நீங்களே நீக்கிய இரண்டு அமைச்சர்கள் பற்றி கூறுகிறேன். பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வாங்கியவர்., மற்றொருவர் தவறாக பேசியவர் இவர்களுக்கு போடுங்கள் கார்டூனை என தெரிவித்தார்.

திமுகவில் இருந்த ஒருவர் போதைப்பொருள் கிடங்கு வைத்து, கடத்தலில் ஈடுபட்டதால் நீங்களே கட்சியை விட்டு ஒதுக்கி வைத்துள்ளீர்கள்., பெரிய வழக்காக சென்று கொண்டிருக்கிறது அவருக்கு போடுங்க கார்ட்டூனை., என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அது மட்டுமல்லாமல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் 90 சதவீதம்,80 சதவீதம் என பொம்மை முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்., அதிமுககாரர்களுக்கு பயம் என்பதே கிடையாது., நீ ஆம்பளையா இருந்தா வாயா! நான்காண்டுகளில் திமுக சாதித்ததை பற்றி பேசலாம் என்று மிகவும் கோபமாக டிஆர்பி ராஜாவுக்கு சிங்கை ராமச்சந்திரன் சவால் விடுத்தார்.
இதையும் படிங்க: அதிமுக பிரமுகருக்கு டபுள் பேரல் துப்பாக்கி கொடுத்தது யாரு? வாய தொறங்க இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!