வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இதனை உறுதிப்படுத்தினார். பீகாரைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற உள்ளதாக தெரிவித்தார். 
அதன்படி கேரளா, மேற்கு வங்கம், குஜராத், சத்தீஸ்கர், கோவா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இன்று முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: நாங்களும் சுப்ரீம் கோர்ட் போவோம்… திமுகவுக்கு மாஜி அமைச்சர் ஜெயக்குமார் சவால்…! 

51 கோடி வாக்காளர்களை சரிபார்க்கும் பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இதற்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த பணியை 4 கட்டமாக பணிகள் நடக்கும். முதல் கட்டமாக, இன்று முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை கணக்கெடுப்பு படிவம் கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. 
2-ம் கட்டமாக 9-ந் தேதி வரைவு பட்டியல் வெளியிடப்படும் என்றும் 3-ஆம் கட்டமாக ஆட்சேபனைகள், கோரிக்கைகள் 9- ஆம் தேதி முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரை பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4-ம் கட்டமாக பெறப்பட்ட கோரிக்கைகள், ஆட்சேபனைகள் ஆகியவை மீது விசாரணை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. 
இதையும் படிங்க: தமிழகத்தில் தொடங்கும் தீவிர SIR பணிகள்... சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுத் தாக்கல்... யாருக்கு சாதகம்...?