ஈரோடு மாவட்டம் சிவகிரியில் ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகியோர் விவசாயம் செய்து வந்தனர். இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும் பானுமதி என்ற மகளும் உள்ளனர். மகனும் மகளும் தனியாக வசித்து வரும் நிலையில் தன் மனைவியுடன் ராமசாமி வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி கவிசங்கர் தன் தந்தைக்கு போன் செய்த போது எடுக்காததால் அருகில் உள்ள உறவினர்கள் மூலமாக வீட்டிற்குச் சென்று பார்க்க சொல்லி உள்ளார். அப்போது வீட்டில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் ராமசாமியும் அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டதும் வீட்டில் இருந்த 12 சவரன் நகைகள் கொள்ளை போனதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 12 தனிப் படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் மாதேஸ்வரன், ராஜேஷ், ஆச்சியப்பன் நகைக்கடை உரிமையாளர் ஞான சேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: தோட்டத்து வீடுகளே டார்கெட்..! நகைக்காக கொடூர கொலைகள்.. ஐ.ஜி செந்தில்குமார் பரபர பிரஸ்மிட்!

இந்த இரட்டை கொலையை செய்தவர்கள் தான் பல்லடம் மூவர் கலைக்கும் காரணம் என்பதை ஒப்பு கொண்டுள்ளனர். இதனால் வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளது. வழக்கின் முக்கியத்துவம் கருதி விசாரணை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெருந்துறை டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ஏடிஎஸ்பி விவேகானந்தனை நியமித்துள்ளனர். உடுமலை சங்கர் கொலை வழக்கு உள்ளிட்ட முக்கியமான வழக்குகளை கையாண்டவர் ஏ.டி.எஸ்.பி. விவேகானந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈரோடு இரட்டை கொலை.. அடுத்தடுத்த கைது..! திடுக்கிடும் தகவல்கள்..!