2016 ஆம் ஆண்டு, கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை அடுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, பொது ஒழுங்கை பாதித்ததாகக் கூறி தொடரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாக கருத முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்தார். குடியிருப்பு பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை அகற்ற நடத்தப்படும் அமைதியான போராட்டங்களை குற்றச் செயலாக கருத முடியாது என்றும் உண்மையில் இந்த கடைகள் மூடப்படுவதற்கு பதிலாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

போராடுவோர் மீது குற்றவியல் வழக்குகளை பதிவு செய்வது ஜனநாயக உரிமைக்கு எதிரானது என்று கூறிய நீதிபதி, மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: #BREAKING: வெளியானது நீட் தேர்வு முடிவுகள்.. இணையதள வாயிலாக காண ஏற்பாடு..!