திருத்தணி அருகே மாணவனின் மலத்தை அவர் கையால் அள்ள வைத்து சாதியின் பெயரைச் சொல்லி தாக்கிய நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்கே பேட்டை அடுத்த செல்லத்துர் கிராமத்தில் செங்கல்சூளை நடத்தி வருபவர் கிருஷ்ண ரெட்டி மகன் மணிகண்டன் (35). இவரது செங்கல் சூளையில்
கடந்த 2017 ம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் திருமலை (16). பிளஸ் 1 படித்து வந்தான் இந்நிலையில் மணிகண்டனின் செங்கல் சூலையில் இயற்கை உபாதை கழித்துள்ளார்.
இதனை பார்த்த மணிகண்டன் அந்த மாணவனை ஆபாசமாக பேசி தாக்கி கையால் அள்ள வைத்து சாதியின் பெயரைச் சொல்லி திட்டி, காலால் எட்டி உதைத்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலடைந்த அந்த மாணவன் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சின்ன தோசைக்காக கல்யாண விருந்தை தவறவிட்ட காங்.,!! முடிந்துபோனதை கிளறும் பிரவீன் சக்கரவர்த்தி!
மேலும் தற்கொலைக்கும் முயன்றுள்ளார். இதனைப் பார்த்ததும் அவனது பெற்றோர் மகனை காப்பாற்றியுள்ளனர். இதுகுறித்து ஆர்கே பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கி்ன் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. அரசு தரப்பில் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.தமிழ் இனியன் ஆஜாராகி வாதாடினர்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் குற்றவாளி மணிகண்டக்கு
3 பிரிவின் கீழ் தலா ஒராண்டு வீதம், 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக தலா 3 மாதங்கள் வீதம் 9 மாதங்கள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: இவர்களுக்கு உதவித்தொகை ரூ. 6000 லிருந்து ரூ 8000 ஆக உயர்வு... புதுச்சேரியில் அமித் ஷா அதிரடி அறிவிப்பு...!