திருச்செந்தூர் கடல் உள்வாங்குவது என்பது அந்தப் பகுதியில் உள்ள கடற்கரை பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு நிகழ்வாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையோரமாகவே அமைந்திருப்பதால், கடலின் இயல்பான நடத்தை இங்கு மிகத் தெளிவாகவும் அடிக்கடியும் தெரியக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி போன்ற சிறப்பு தினங்களில் அதாவது மாதந்தோறும் அந்த நாட்கள் மற்றும் அவற்றுக்கு முன், பின் ஒரிரு நாட்களில் கடல் திடீரென உள்வாங்குவது நடக்கிறது. இந்த உள்வாங்குதல் சில சமயங்களில் 50 அடி முதல் 200 அடி கூட உள்வாங்கி இருக்கிறது.

கடல் நீர் திடீரென பின்வாங்கும்போது, பாசி படர்ந்த பாறைகள், மூழ்கியிருந்த கடல் பகுதிகள், சில சமயங்களில் பழைய பாதைகள் கூட வெளிப்படுவதை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். பாறைகளில் ஏறி செல்பி எடுப்பவர்கள் அதிகரிப்பதால் காவல்துறையினரும் கோயில் நிர்வாகமும் எச்சரிக்கை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதையும் படிங்க: ஸ்கூல் ஆண்டு விழாவில் இனி 'NO' விஜய் பாடல்கள்..!! வெளியான அதிரடி தடை..!! காரணம் இதுதானாம்..!!
கடந்த சில ஆண்டுகளாக திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பு தீவிரமாகி வருவதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இன்று அமாவாசை தினம் என்பதால் திருச்செந்தூர் கடல் 75 அடி வரை உள்வாங்கி இருக்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சற்று அச்சமடைந்தனர். அடிக்கடி இந்த நிகழ்வு நடைபெற்றாலும் கூட திடீரென பார்ப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
இதையும் படிங்க: மும்பையில் த்ரிஷாவிடம் அமித்ஷா தரப்பு பேச்சுவார்த்தை?! அதிமுக -பாஜகவில் இணைகிறதா தவெக?