தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அவர்கள் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 30-ஆம் தேதி பெரம்பூரில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த அவர், அதே பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டத்தையும் நடத்தினார். இருப்பினும், பெரம்பூரில் அவருக்காகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட தேர்தல் தலைமை அலுவலகம் இன்னும் திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பது தொண்டர்களிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது சூறாவளிப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில், விஜய்யின் தேர்தல் அலுவலக விவகாரம் பெரம்பூர் தொகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் ஜவகர் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தேர்தல் பணிமனை, ஒரு கார்ப்பரேட் அலுவலகத்திற்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்! பெரம்பூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பு!
முற்றிலும் குளிரூட்டப்பட்ட இரண்டு சொகுசு அறைகள், பார்வையாளர் அரங்கம் மற்றும் சிறிய அலுவலகப் பகுதி. ஸ்மார்ட் கழிப்பறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் குறுகிய காலத்தில் இந்தப் பணிமனை கட்டி முடிக்கப்பட்டது.
வேட்புமனுத் தாக்கல் செய்ய விஜய் வந்தபோதே இந்த அலுவலகத்தைத் திறந்து வைப்பார் என நிர்வாகிகள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், விஜய் நேரடியாகப் பொதுக்கூட்டத்திற்குச் சென்றுவிட்டதால் இந்த அலுவலகம் திறக்கப்படாமலேயே உள்ளது.
தற்போது தவெக-வின் தேர்தல் பணிகள் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் சிவா அவர்களின் அலுவலகத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விஜய் நேரில் வந்து அமர்ந்து பணிகளைக் கவனிப்பார் என்பதற்காகவே இது பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டது. அவர் வராததால், தற்போது வரை இந்தச் சொகுசு அலுவலகம் பூட்டிய நிலையிலேயே காணப்படுகிறது.
இன்று சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "திமுக-வில் சரக்கு ஒன்றுதான், பாட்டில் தான் வேறு" என வேட்பாளர் மாற்றத்தைக் கிண்டலடித்தார். அதேபோல், சென்னையில் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா கூட்டத்தில் மதுபாட்டில் வீசப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தகைய விறுவிறுப்பான அரசியல் சூழலில், வேட்பாளரான விஜய் தனது பிரதான அலுவலகத்தைத் திறக்காமல் இருப்பது தேர்தல் பணிகளில் சற்றுத் தொய்வை ஏற்படுத்தியுள்ளதாக உள்ளூர் நிர்வாகிகள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: அசால்ட்டாக ரயிலில் கஞ்சா கடத்தல்... 2 பேர் கைது..! பெரம்பூர் ரயில்வே போலீஸ் அதிரடி..!!