தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளரும், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவருமான வீரா என்பவருக்கு எதிராக லஞ்சம் வாங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வெளியான இந்த வீடியோவில், ஒரு ஒப்பந்ததாரர் வீராவின் அலுவலகத்தில் அவரிடம் ரூ.1.30 லட்சம் பணத்தை ஜிபே (UPI) மூலம் அளிப்பது பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் த.வெ.க.வுக்குள் மட்டுமின்றி, தமிழக அரசியல் வட்டாரங்களிலும் கடும் விமர்சனங்களைத் தூண்டியுள்ளது.
வீடியோவில் காட்சியாகும் நிகழ்வு மாம்பாக்கம் பகுதியில் உள்ள வீராவின் அலுவலகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. சாலைப் பணிகள் தொடர்பான ஒப்பந்ததாரர் ஒருவர், பணிகளுக்கான தொகை விடுவிப்பு சம்பந்தமாக வீராவைச் சந்தித்தபோது இந்தப் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

வீடியோ பரவிய சில மணி நேரங்களுக்குள் பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இது பெரும் கவனத்தைப் பெற்றது. பலர் இதை த.வெ.க.வின் ஊழல் முகமாகச் சுட்டிக்காட்டினர். தொடர்ந்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளராக இருந்த வீராசாமி தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க: “திமுகவுடன் நட்பு தொடர்கிறது...” - தமிழகமே அதிர அறிவித்த திருமாவளவன்... தவெகவிற்கு செம்ம ஷாக்...!
தவெகவில் இருந்து நீக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட செங்கல்பட்டு, மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும் தவெக முன்னாள் நிர்வாகியுமான வீராசாமி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. ஊழல் தடுப்பு, பணம் பறித்தல், மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு. 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: பெண் நிர்வாகி ஆடை கிழிப்பு... ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை... தவெக எம்.எல்.ஏ. கண் முன் நடந்த களேபரம்...!