தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னையில் பரப்புரை செய்கிறார். அதைத் தொடர்ந்து கழக நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்துக் கொள்ள உள்ளார். இது தொடர்பான முழு அறிவிப்பை தலைமை கழகம் வெளியிட்டு உள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 21.04.2026, செவ்வாய்க்கிழமையான இன்று சென்னையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது என தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
மதியம் 12 மணி முதல், பாலவாக்கம் அம்பேத்கர் சிலை, திருவான்மியூர் நாகாத்தம்மன் கோவில் சந்திப்பு, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் அண்ணா சாலை கலைஞர் வளைவு - ஜூனிஸ் சாலை சந்திப்பு ஆகியவற்றின் வழியாக, மக்களின் வெற்றித் தலைவர் அவர்கள் வாகனப் பிரசாரம் மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்கு, சைதாப்பேட்டை நந்தனம் YMCA மைதானத்தில் வெற்றித் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்தத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறி இருக்கிறது. பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் விஜயின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: Blast சம்பவம்: நடுரோட்டில் மணக்கோலத்தில் நின்ற புதுமண தம்பதி... சட்டென விஜய் செய்த செயல்...!
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு, QR கோடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ள 5000 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணைய விதிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: விஜய் ஆப்செண்ட், ஆர்.டி.சேகர் அப்செட்... பெரம்பூரில் பெண்களின் குரலாக உருவெடுக்கும் திலகபாமா...!