சென்னையில் மதுரைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்க தாகூர் ஆகியோர் ஒரே விமானத்தில் வந்து இறங்கினர். தவெகவா? திமுகவா? போட்டி போட்டு மதுரை விமான நிலையத்தில் கூச்சல் எழுப்பிய தொண்டர்களால் பரபரப்பு.
தியாகி இம்மானுவேல் சேகரன் 69ஆவது நினைவு தினம் செப்டம்பர் 11ம் தேதியையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் நாளை பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் நாளை பரமக்குடியில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். இதற்காக சென்னையிலிருந்து மதுரைக்கு வரும் கடைசி விமானத்தில் மதுரைக்கு வருகை தந்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் அவரை வரவேற்பதற்காக மதுரை விமான நிலையத்தில் ஏராளமான தமிழக வெற்றி கழக தொண்டர்கள் குவிந்தனர்.
இதையும் படிங்க: பொது நிறுவனங்களின் குழு தலைவராக விஜயன்பன் கல்லானை நியமனம்..!! பேரவை விதியின் கீழ் முக்கிய முடிவு..!!
அதே விமானத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் மதுரை வர நிலையில் அவரை வரவேற்பதற்காக ஏராளமான திமுக தொண்டர்கள் மதுரை விமான நிலையத்தில் குவிந்தனர்.
தொண்டர்களால் அசாதாரணமான சூழல் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக போலீசார் இரு பக்கமாக தடுப்பு வேலிகள் அமைத்து தொண்டர்களை தனித்தனியாக நிறுத்தினார்.
இந்த நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமான நிலையத்திற்குள் இருந்து வெளியே வரவும் வெளியே காத்திருந்த தொண்டர்கள் திமுக,திமுக என கோஷம் எழுப்ப தொடங்கினர். அதே நேரத்தில் அமைச்சர் சிடி நிர்மல் குமாரும் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தவுடன் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் டி வி கே, டி வி கே என கோஷம் எழுப்ப தொடங்கினர்.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தொண்டர்கள் போட்டி போட்டு திமுக டிவி கே என கோசம் எழுப்பியதால் மதுரை விமான நிலையம் பரபரப்பானது.
இதையும் படிங்க: பரந்தூரில் குறைகடத்தி பூங்கா அமைக்க திட்டம்... முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு நடவடிக்கை.!!