2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
திமுகவை பொருத்தவரை மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய தலைவர்கள் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார். இதற்கிடையில் தொகுதி மறு வரையறை பிரச்சனை எழுந்ததால் இன்று கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க: கடும் வார்த்தை போர்..!! ஒரே ஃபிளைட்டில் பறக்கும் உதயநிதி - இபிஎஸ்..!! பின்னணி என்ன..??
இந்த நிலையில், மதுரை கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் மூர்த்தியை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதி மறு வரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடை அணிந்து துணை முதல்வர் உதயநிதி பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், சங்கீ கூட்டத்தின் கலவர சதியை முறியடித்தவர்கள் மதுரை மக்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் பாசிச பாஜகவால் தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். ஏப்ரல் 23ஆம் தேதி பாசிஸ்டுகளுக்கு தக்க பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்கணும்..! அண்ணா நகர் வேட்பாளருக்கு உதயநிதி வாக்கு சேகரிப்பு..!!