விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வடகரை ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலையில் இன்று காலை தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்து வந்துள்ளனர்.

அப்போது திடீரென பட்டாசு ஆலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்ததோடு, வெடிவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் கட்டிடம் ஒன்று இடிந்து முற்றிலும் தரைமட்டமானது. விபத்து குறித்து காரியாப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.