தற்போது நான் தவெக கூட்டணியில் இருக்கிறேன் ஆட்சியில் நடப்பது ஏதாச்சும் சரியில்லை என்றால் ரோட்டுக்கு வந்து பொதுவெளியில் விமர்சனம் பண்ண மாட்டேன். தவெக கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளின் தலைவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன், உங்களுக்குக் குறை ஏதாச்சும் இருந்தால் நேராக அமைச்சர்களிடம் போய் சொல்லுங்கள் அல்லது முதலமைச்சரைப் பார்த்துச் சொல்லுங்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆலோசனையையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.

தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே அதன் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்துக் கூட்டணியில் உள்ள சில கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து பொது ஊடகங்களில் விமரிசனப் புள்ளிவிவரங்களை முன்வைத்து வரும் சூழலில், அரசியல் அரங்கில் புதிய விவாத அலைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, தற்போதைய அரசியல் மற்றும் கூட்டணிக் தர்மம் குறித்து மிக ஆவேசமாகத் தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.
இதையும் படிங்க: அரசியல் தலையீடுகளுக்கு இனி நோ சான்ஸ்! உயர்கல்வித் துறையை டிஜிட்டல் மற்றும் நேர்மையாக மாற்றும் தவெக அரசு!
மேடையில் அசுர வேகத்தில் முழங்கிய வைகோ, கூட்டணியில் இருந்து கொண்டே தினம் ஒரு பேட்டி கொடுப்பது ஏன்? ஆட்சியை முழுமையாக ஆதரிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் அவர்கள் மீது பொதுவெளியில் குறை சொல்வதா? இது என்ன மாதிரியான அரசியல் நிலைப்பாடு? எனக்கு ஏதேனும் குறைகள் தெரிந்தால் நான் நேரடியாக அமைச்சர்களுக்கு போன் பண்ணி சொல்வேன், ஏன் முதலமைச்சருக்கே போன் பண்ணி சொல்வேன். அதை விடுத்து ஊடகங்கள் முன்னிலையில் அவதூறுகளைப் பரப்புவது முறையல்ல. குறை சொல்ல வேண்டும் என்று நினைத்தால் நேராக முதலமைச்சரிடமும், அமைச்சர்களிடமும் சென்று என்று அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து எதிர்க்கட்சியான திமுகவின் விமரிசனங்களுக்குப் பதிலடி கொடுத்த வைகோ, விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே திமுகவினர் கடுமையான வயிற்றெரிச்சலில் உள்ளனர். இந்த அரசு 3 மாதங்களில் கவிழ்ந்துவிடும், 6 மாதங்களில் கவிழும் என திமுகவினர் தங்களது ஆற்றாமையால் பேசி வருகின்றனர். ஆனால், விஜய் தலைமையிலான தவெக அரசு 5 ஆண்டுகள் முழுமையாகத் தொடர்ந்து நீடிக்கும். திமுகவினரின் எந்தவொரு சதி முயற்சியும் இங்கு ஒருபோதும் பலிக்காது. மக்கள் நலன் சார்ந்த மிகச் சிறந்த நல்லாட்சியை வழங்கி வரும் தவெக அரசுக்கு மதிமுக என்றும் இரும்பு அரணாக நின்று தனது முழு தார்மீக ஆதரவைத் தரும் என்று அதிரடியாக முழங்கினார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்கள் ஊதியம் உயர்வு..! 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் விஜய்..! அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு..!!