• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    12 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை.. மத்திய அமைச்சர்  பெருமிதம்!

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 12 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 21 Jun 2026 16:13:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Zero Corruption in 12 Years of BJP Rule: Union Minister Kishan Reddy Highlights Modi Govt's Infrastructure Milestones in Chennai

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 12 ஆண்டுகாலத் தொடர் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் ஒரு சிறு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை என்றும், நாடு முழுவதும் பக்கா சாலை வசதிகள் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கலந்துகொண்டு பேசினார். முன்னதாக, தென்சென்னை பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 12-வது சர்வதேச யோகா தின விழாவில் கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களோடு இணைந்து அவர் யோகா பயிற்சி மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்த தலைவர்களில் ஒருவராக நரேந்திர மோடி திகழ்கிறார் என்றும், மக்கள் அவர் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகவே மூன்றாவது முறையாகத் தொடர்ந்து பிரதமராகும் அரிய வாய்ப்பை வழங்கியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

    செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கிஷன் ரெட்டி பேசியதாவது: "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டு மக்களுக்கான அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை வழங்கி வருகிறது. பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டம், டிஜிட்டல் அடையாளக் கட்டமைப்பு மற்றும் மொபைல் இணைப்பு ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் நேரடிப் பணப்பரிமாற்றம் (DBT) சாத்தியமாகியுள்ளது. இதன் மூலம் சுமார் 34 லட்சம் கோடி ரூபாய் எவ்வித இடைத்தரகர்களுமின்றி, பூஜ்ஜிய ஊழல் என்ற அடிப்படையில் நேரடியாக ஏழை எளிய மக்களின் வங்கி கணக்குகளுக்குச் சென்றடைந்துள்ளது. பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் கொள்கை முற்றிலும் மாறியுள்ளதுடன், எல்லையோரப் பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு வன்முறைகளுக்கு எதிராக மத்திய அரசு 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' (Zero Tolerance) கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, அங்கு அமைதி திரும்பி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் நிலவிய பிரிவினைவாதக் குழுக்கள் தங்களது ஆயுதங்களைக் கைவிட்டு, ஜனநாயகப் பாதையில் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு முகம் கொடுத்துள்ளது. 2014-ஆம் ஆண்டிற்கு முன்பு நலிவடைந்த பொருளாதாரமாகப் பார்க்கப்பட்ட இந்தியா, இன்று உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.

    கிஷன் ரெட்டி

    இதையும் படிங்க: மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    2014-இல் ஒரு நாளைக்கு 11 கி.மீ என்ற அளவில் இருந்த தேசிய நெடுஞ்சாலைக் கட்டுமானம், தற்போது நாளொன்றுக்கு 40 கி.மீ என்ற உலக சாதனை வேகத்தில் கட்டப்பட்டு வருகிறது. சடக் யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சிறப்பான கிராமப்புற மற்றும் நகர்ப்புற சாலை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-லிருந்து 164 ஆக உயர்ந்துள்ளதுடன், 26-க்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகளும், நாடு முழுவதும் 'வந்தே பாரத்' மற்றும் 'அமிர்த பாரத்' நவீன ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 2014-க்கு முன்பு பல்லாயிரக்கணக்கான மக்கள் வங்கி கணக்கு இல்லாமல் இருந்த நிலை மற்றும் வீட்டில் உள்ள பெண்கள் விறகு அடுப்பை பயன்படுத்திச் சமைத்து வந்த நிலை மாறி, தற்போது அனைவரின் வீடுகளுக்கும் எரிவாயு அடுப்பு சென்றுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான இந்த 12 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட எழவில்லை.

    மத்திய நிலக்கரித்துறை வரலாற்றிலேயே முதன்முறையாகக் கடந்த ஆண்டுகளில் 1 பில்லியன் டன்னுக்கும் அதிகமான நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்தியா உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது நிலக்கரியிலிருந்து சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத வகையில் எத்தனால், மெத்தனால், எரிவாயு போன்ற துணைப் பொருட்களைத் தயாரிக்கும் 'நிலக்கரி வாயுவாக்கம்' (Coal Gasification) திட்டத்திற்கு மத்திய அரசு 46,000 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இதற்கான இறுதி வழிகாட்டு நெறிமுறைகள் அடுத்த இரு மாதங்களுக்குள் வெளியிடப்படும். விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான லித்தியம், கோபால்ட் போன்ற முக்கியத் தாதுக்களை (Critical Minerals) உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கண்டறிந்து அகழ்வாராய்ச்சி செய்ய 34,000 கோடி ரூபாய் மதிப்பிலான 'தேசிய முக்கிய தாதுக்கள் இயக்கம்' தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி (NLC) நிறுவனம், பாபா அணு ஆராய்ச்சி மையத்துடன் (BARC) இணைந்து நடத்திய உள்கட்டமைப்பு ஆய்வில், நிலக்கரி மற்றும் லிக்னைட் எரிப்புக்குப் பின் கிடைக்கும் சாம்பலிலிருந்து 'அரிய புவி தனிமங்கள்' (Rare Earth Elements) கண்டறியப்பட்டுள்ளன. இவை புற்றுநோய் மருந்து தயாரிப்பிற்குப் பயன்படக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஓராண்டிற்குள் இதற்கான முன்னோடித் திட்டம் இறுதி செய்யப்பட்டு, வணிக ரீதியிலான உற்பத்தி தமிழ்நாட்டில் தொடங்கும். இத்தகைய சுரங்கப் பணிகள் மூலம் கிடைக்கும் பிரீமியம், ராயல்டி மற்றும் மாவட்டக் கனிம அறக்கட்டளை (DMF) நிதி உள்ளிட்ட அனைத்து வருவாயும் 100 விழுக்காடு முழுமையாகத் தமிழ்நாடு அரசிடமே ஒப்படைக்கப்படும். இதனால் மாநிலத்தின் வளர்ச்சி மேம்படும் என்பதால், என்.எல்.சி நிலக் கையகப்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களுக்குத் தமிழக மக்களும், புதிய தவெக அரசும் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்" என்று அமைச்சர் கிஷன் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார். பேரவை விதிகளுக்கு உட்பட்டுப் பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு கொண்டு வரும் உள்கட்டமைப்புத் திட்டங்களை மாநில அரசு விரைவுபடுத்த வேண்டும் என்ற அமைச்சரின் இந்த அறிவிப்பு கோட்டை வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

     

     

    இதையும் படிங்க: ஸ்லோவாக்கியா பயணத்தை முடித்து ஜி7 மாநாட்டில் களமிறங்கிய பிரதமர் மோடி.. டிரம்ப், ஸ்டார்மருடன் கலந்துரையாடல்!

    மேலும் படிங்க
    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில்

    நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    இந்தியா
    வாயு கசிவு விவகாரத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு; விசாரிக்க அரசு உயர்மட்ட குழுவை அமைத்தார் முதல்வர் விஜய்!

    வாயு கசிவு விவகாரத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு; விசாரிக்க அரசு உயர்மட்ட குழுவை அமைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    திமுகவை விட தவெக ஜெட் வேகத்தில் செல்கிறது.. பெண்கள் மீதான அத்துமீறல் குறித்து நயினார் நாகேந்திரன் சாடல்!

    திமுகவை விட தவெக ஜெட் வேகத்தில் செல்கிறது.. பெண்கள் மீதான அத்துமீறல் குறித்து நயினார் நாகேந்திரன் சாடல்!

    தமிழ்நாடு
    நீட் போராட்ட மாணவர் மீது தாக்குதல்: தமிழக போலீசாரின் அராஜக நடவடிக்கைக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கண்டனம்!

    நீட் போராட்ட மாணவர் மீது தாக்குதல்: தமிழக போலீசாரின் அராஜக நடவடிக்கைக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    "இளைஞர்களின் கோரிக்கையை ஏற்றே நடனமாடினேன்!" - விமர்சனங்களுக்கு அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்!

    "இளைஞர்களின் கோரிக்கையை ஏற்றே நடனமாடினேன்!" - விமர்சனங்களுக்கு அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    இந்தியா
    வாயு கசிவு விவகாரத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு; விசாரிக்க அரசு உயர்மட்ட குழுவை அமைத்தார் முதல்வர் விஜய்!

    வாயு கசிவு விவகாரத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு; விசாரிக்க அரசு உயர்மட்ட குழுவை அமைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    திமுகவை விட தவெக ஜெட் வேகத்தில் செல்கிறது.. பெண்கள் மீதான அத்துமீறல் குறித்து நயினார் நாகேந்திரன் சாடல்!

    திமுகவை விட தவெக ஜெட் வேகத்தில் செல்கிறது.. பெண்கள் மீதான அத்துமீறல் குறித்து நயினார் நாகேந்திரன் சாடல்!

    தமிழ்நாடு
    நீட் போராட்ட மாணவர் மீது தாக்குதல்: தமிழக போலீசாரின் அராஜக நடவடிக்கைக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கண்டனம்!

    நீட் போராட்ட மாணவர் மீது தாக்குதல்: தமிழக போலீசாரின் அராஜக நடவடிக்கைக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு

    "இளைஞர்களின் கோரிக்கையை ஏற்றே நடனமாடினேன்!" - விமர்சனங்களுக்கு அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share