தென் ஆப்பிரிக்காவின் லாரா வால்வார்ட், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் எடுத்த 27 மற்றும் 28 ரன்கள் உட்பட 19 மதிப்பீட்டு புள்ளிகளை இழந்தது ஸ்மிருதி மந்தனா முன்னிலை பெற உதவியது. இதுக்குறித்து வெளியான ஐசிசி மகளிர் ஒருநாள் வீராங்கனைகள் தரவரிசை பட்டியலில், 2019க்குப் பிறகு முதல் முறையாக மந்தனா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் லாரா வால்வார்ட், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அவரது சமீபத்திய செயல்திறன் 27 மற்றும் 28 ரன்கள் உட்பட 19 மதிப்பீட்டு புள்ளிகளை இழந்த பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டது.

முத்தரப்பு தொடரின் இறுதி ஆட்டம் மந்தனாவின் முதலிடத்தை மீண்டும் பெற உதவியது. மகளிர் ஒருநாள் சர்வதேசப் போட்டி பேட்ஸ்மேன்கள் பட்டியலில் மந்தனா தொடர்ந்து முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்து வருகிறார். அவர் இப்போது 727 மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுள்ளார். இது இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவர் -பிரண்ட் மற்றும் வால்வார்ட்டை விட எட்டு புள்ளி அதிகம். இருப்பினும், ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் முதலிடத்தை மீண்டும் பெற உதவியது அவரது சமீபத்திய செயல்திறன்தான்.

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டியில் இடது கை வீராங்கனையான இவர், 116 ரன்கள் எடுத்து, வோல்வார்ட்டின் மதிப்பீட்டை முந்தினார். இந்தத் தொடரில் அவர் எடுத்த மற்ற ரன்கள் 51, 18, 36, மற்றும் 43 ஆகும். வால்வார்ட் இப்போது இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர்-பிரண்டுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவின் டாஸ்மின் பிரிட்ஸ் (27வது) மற்றும் சுனே லூஸ் (42வது) ஆகியோர் ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர். சமீபத்திய அற்புதமான ஆட்டங்களுக்குப் பிறகு அவர்கள், முறையே ஐந்து மற்றும் ஏழு இடங்கள் முன்னேறினர். பந்து வீச்சாளர்கள் பிரிவில், இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் 747 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். தீப்தி சர்மா (4வது) சிறந்த தரவரிசை பெற்ற இந்திய பந்து வீச்சாளர் ஆவார்.