கடந்த வாரம் ஹராரேயில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய இளையோர் அணி 6-வது முறையாக உலகக்கோப்பையை உச்சி முகர்ந்தது. இந்த வரலாற்று வெற்றியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஆர்.எஸ். அம்பரீஷ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் டி. தீபேஷ் ஆகிய இருவரின் பங்களிப்பு மிக முக்கியமானது.

இந்தத் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டராக ஜொலித்த அம்பரீஷ், நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக பந்துவீச்சில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்குத் தூணாகத் திகழ்ந்தார். தனது துல்லியமான வேகப்பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த தீபேஷ், தொடர் முழுவதும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஏற்கனவே ஆசியக்கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக இருந்த இவர், உலகக்கோப்பையிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
இதையும் படிங்க: WPL 2026: பெங்களூரு அணி மீண்டும் சாம்பியன்! Ee Saala Cup Namdu.. மந்தனா அதிரடி!
இவர்களின் இந்தச் சாதனையைப் பாராட்டும் விதமாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) அவர்களுக்குத் தலா ₹5 லட்சம் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. ஏற்கனவே பிசிசிஐ (BCCI) ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் ₹7.5 கோடி பரிசுத்தொகையை அறிவித்திருந்த நிலையில், மாநிலச் சங்கமான TNCA-வின் இந்த அறிவிப்பு தமிழக வீரர்களுக்குப் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஆஸ். கேப்டன்..!!