• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வேங்கைவயல் வழக்கு.. 750 நாட்கள் கப்சிப்.. 3 நாளில் எப்படி முடிச்சீங்க..சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை!

    வேங்கைவயல் வழக்கில் பட்டியலின இளைஞர்கள் மூன்று பேர் மீது அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது பலத்த சந்தேகத்தை எழுப்புவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Sat, 25 Jan 2025 22:13:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bjp leader Annamalai attacked DMK government von Vengaivayal case issue

    இது தொடர்பாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  “புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் சமூக மக்களுக்கான மேல்நிலை நீர்த்தொட்டியில் சமூக விரோதிகள் மனிதக்கழிவை கலந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதை அடுத்துத் தொடர்ந்த வழக்கு, எந்த முன்னேற்றமும் இன்றி, இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்டது. தற்போது, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று பேரையே குற்றவாளிகள் என்று திமுக அரசு கூறியிருப்பது பலத்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது.


    கடந்த டிசம்பர் 24, 2022 அன்று, மேல்நிலை நீர்த்தொட்டியிலிருந்து தண்ணீரைப் பயன்படுத்திய பட்டியல் சமூக மக்களுக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவப் பரிசோதனையில், மக்கள் பயன்படுத்திய குடிநீர் காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்தது. இதனை அடுத்து, வேங்கைவயல் கிராமத்து இளைஞர்கள் சிலர், மேல்நிலை நீர்த்தொட்டியில் ஏறிப் பார்த்தபோது, தண்ணீரிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்டறிந்தனர். மேலும், மேல்நிலை நீர்த்தொட்டியின் உள்ளே கழிவுகள் மிதப்பதையும் கண்டறிந்தனர்.

    Annamalai

    உடனடியாக, வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், 26.12.2022 அன்று காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல் துறையினர், விசாரணை என்ற பெயரில், பட்டியல் சமூக இளைஞர்களையே தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள், உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதில் தொய்வு காட்டிய காவல்துறைக்கும், திமுக அரசுக்கும் எதிராகப் போராட்டங்களை நடத்தினர். பொதுமக்கள் போராட்டத்துக்குப் பிறகு, இந்த வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியது திமுக அரசு. ஆனாலும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    எனவே, மார்க்ஸ் ரவீந்திரன், பாஜகவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ். மணி ஆகியோர் மூலம், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது உயர் நீதிமன்றத்தின் தலைமையில் சிபிஐ விசாரணை அல்லது சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி 24.02.2023 அன்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியதை அடுத்து, உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
    கடந்த 29.03.2023 அன்று, சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். சத்தியநாராயணா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை நியமித்து, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த ஒரு நபர் ஆணையம், கடந்த 14.09.2023 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தது. ஆனால் விசாரணையை முழுமையாக முடித்து, இறுதி அறிக்கையை இன்று வரை தாக்கல் செய்யவில்லை.

    இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய வேங்கைவயல் சம்பவம்; சந்தேகத்தை கிளப்பும் திருமா...!

    Annamalai

    கடந்த 16.04.2024 அன்று, இந்த வழக்கு தொடர்பான பொதுநல மனுக்கள், அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கில் இன்று வரை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும், வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், வழக்கை நடத்துவதில் தமிழகக் காவல்துறை பொறுப்பின்றிச் செயல்படுகிறது என்றும் எடுத்துக் கூறப்பட்டதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா அமர்வு, அடுத்த மூன்று மாதங்களுக்குள், அதாவது 03.07.2024 அன்று அல்லது அதற்கு முன்னர், விசாரணையை முடித்து இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டது.

    ஆனால், அதற்குப் பின்னரும், ஒரு நபர் ஆணையமோ, சிபிசிஐடி-யோ விசாரணையை முடித்து இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை. யார் மீதும் வழக்குப்பதிவோ, குற்றப்பத்திரிகையோ தாக்கல் செய்யப்படவில்லை என்ற நிலையில், கடந்த 23.01.2025 அன்று, குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்ய இன்னும் கால அவகாசம் வேண்டும் என்று, சிபிசிஐடி போலீஸார் புதுக்கோட்டை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

    இதனிடையே, 23.01.2025 அன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் இந்தப் பொதுநல வழக்கு, விசாரணைக்கு வந்தபோது, கடந்த 20.01.2025 அன்றே புதுக்கோட்டைச் சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மூவர் மீது 20.01.2025 அன்றே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்றால், 23.01.2025 அன்று, புதுக்கோட்டைச் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி அவகாசம் கேட்டது ஏன்?

    Annamalai

    குற்றம் நடைபெற்று சுமார் 750 நாட்கள் ஆகின்றன. இத்தனை நாட்களும் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் வழக்கு விசாரணையில் இல்லை. தொடக்கம் முதலே, வழக்கு விசாரணையின் போக்கு முறையானதாக இல்லை. முன்னுக்குப்பின் முரணாக தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பாக, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கால அவகாசம் வேண்டும் என்று காவல் துறை மனுத்தாக்கல் செய்த நிலையில், அவசர அவசரமாக, பட்டியல் சமூக இளைஞர்கள் மூன்று பேர் மீதே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதாகக் கூறுவது, பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

    திமுக அரசின் கீழ் நடக்கும் இந்த விசாரணையின் மீது, பொதுமக்களுக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை. இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு, வழக்கை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்பதுதான் திமுக அரசின் நோக்கமாகத் தெரிகிறது. எனவே, இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்ற நோக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை, சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்பதே தமிழக பாஜக-வின் நிலைப்பாடு” என்று அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: “ஒரு அடி கூட உள்ள வர முடியாது” - திருமாவுக்கு நேரடி சவால்; போலீஸ் வளையத்திற்குள் வேங்கைவயல்! 

    மேலும் படிங்க
    #269, சைனிங் ஆஃப்... டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு: விராட் கோலி திடீர் அறிவிப்பு..!

    #269, சைனிங் ஆஃப்... டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு: விராட் கோலி திடீர் அறிவிப்பு..!

    கிரிக்கெட்
    பாக்.,ஐ அழிக்கணும்... அந்த 93,000 துப்பாக்கிகளை கொடுங்கள்... இந்தியாவிடம் உதவி கேட்கும் பலூச்படை..!

    பாக்.,ஐ அழிக்கணும்... அந்த 93,000 துப்பாக்கிகளை கொடுங்கள்... இந்தியாவிடம் உதவி கேட்கும் பலூச்படை..!

    உலகம்
    இந்த அவமானம் தேவையா?... எடப்பாடியை அசிங்கப்படுத்திய பெண் மாவட்ட செயலாளர்...!

    இந்த அவமானம் தேவையா?... எடப்பாடியை அசிங்கப்படுத்திய பெண் மாவட்ட செயலாளர்...!

    அரசியல்
    முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை..! மிக முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விவாதம்..!

    முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை..! மிக முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விவாதம்..!

    இந்தியா
    சேலத்தில் முதிய தம்பதி படுகொலை.. தொடர் கொலைகளால் நடுங்கும் கொங்கு மக்கள்..!

    சேலத்தில் முதிய தம்பதி படுகொலை.. தொடர் கொலைகளால் நடுங்கும் கொங்கு மக்கள்..!

    குற்றம்
    நான் நிம்மதியாக தூங்க இவங்க தான் காரணம்..! நடிகை சமந்தாவின் இன்ஸ்டா ஸ்டோரி வைரல்..!

    நான் நிம்மதியாக தூங்க இவங்க தான் காரணம்..! நடிகை சமந்தாவின் இன்ஸ்டா ஸ்டோரி வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    பாக்.,ஐ அழிக்கணும்... அந்த 93,000 துப்பாக்கிகளை கொடுங்கள்... இந்தியாவிடம் உதவி கேட்கும் பலூச்படை..!

    பாக்.,ஐ அழிக்கணும்... அந்த 93,000 துப்பாக்கிகளை கொடுங்கள்... இந்தியாவிடம் உதவி கேட்கும் பலூச்படை..!

    உலகம்
    இந்த அவமானம் தேவையா?... எடப்பாடியை அசிங்கப்படுத்திய பெண் மாவட்ட செயலாளர்...!

    இந்த அவமானம் தேவையா?... எடப்பாடியை அசிங்கப்படுத்திய பெண் மாவட்ட செயலாளர்...!

    அரசியல்
    முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை..! மிக முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விவாதம்..!

    முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை..! மிக முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விவாதம்..!

    இந்தியா
    சேலத்தில் முதிய தம்பதி படுகொலை.. தொடர் கொலைகளால் நடுங்கும் கொங்கு மக்கள்..!

    சேலத்தில் முதிய தம்பதி படுகொலை.. தொடர் கொலைகளால் நடுங்கும் கொங்கு மக்கள்..!

    குற்றம்
    கும்பி எரியுது! குடல் கருகுது! குளு குளு வாசம் ஒரு கேடா? ஸ்டாலினை கிழித்த பொள்ளாச்சி ஜெயராமன்..!

    கும்பி எரியுது! குடல் கருகுது! குளு குளு வாசம் ஒரு கேடா? ஸ்டாலினை கிழித்த பொள்ளாச்சி ஜெயராமன்..!

    தமிழ்நாடு
    உலக தலைவர்களுடன் போஸ் மட்டும்தான்... பாகிஸ்தானிடம் மாஸ்காட்ட முடிந்ததா மோடி..? ஜோதிமணி காட்டம்..!

    உலக தலைவர்களுடன் போஸ் மட்டும்தான்... பாகிஸ்தானிடம் மாஸ்காட்ட முடிந்ததா மோடி..? ஜோதிமணி காட்டம்..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share