பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் விசாரணையை அதிகபட்சமாக 2 மாதங்களுக்குள் நடத்தி முடித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் எனத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கீழமை நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ (POCSO) வழக்குகளின் விசாரணை காலதாமதமின்றி விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தித் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இன்று மிக முக்கியத்துவம் வாய்ந்த வழிகாட்டுதல்களைப் பிறப்பித்துள்ளது.

நீதிமன்றம் பிறப்பித்த அந்த உத்தரவில், "பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுமிகளுக்கு எதிரான போக்சோ சட்டம் தொடர்பான வழக்குகளின் விசாரணையைத் தகுந்த காரணங்களின்றித் தள்ளி வைக்கக்கூடாது.
இதையும் படிங்க: குளிர்பானத்தில் மயக்க மருந்து... சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!" - குற்றவாளிக்கு சாகும் வரை சிறை!
இத்தகைய வழக்குகளை அதிகபட்சமாக 2 மாத காலத்திற்குள் முழுமையாக விசாரித்து முடித்து இறுதித் தீர்ப்பளிக்கத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டக் கீழமை நீதிமன்றங்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும், தடயவியல் சான்றுகள் மற்றும் சாட்சியங்களை உடனுக்குடன் சேகரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஏதுவாகவும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிரத்யேகச் 'சிறப்பு அதிரடிப் படை' (Special Task Force) ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும்" எனத் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் (DGP) அவர்களுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது. 
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: குடும்ப பிரச்சனை: அமைச்சர் மரிய வில்சனுக்கு மீண்டும் ஆகஸ்ட் 12-ல் ஆஜராக உத்தரவு!