• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    இன்ஸ்ட்டாவில் பதிவான போட்டோ.. தடையை மீறி மலைக்கு சென்ற நடிகை..! விசாரணையை தொடங்கிய வனத்துறையினர்..!

    தடையை மீறி மலைக்கு சென்ற நடிகையிடம் வனத்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
    Author By Bala Wed, 28 Jan 2026 12:42:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-actress-who-went-to-annamalaiyar-hill-defying-the-ban-forest-department-investigates-tamilcinema

    தமிழகத்தின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் திருவண்ணாமலையில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்து வருகிறது. குறிப்பாக, கோவில் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை, சிவபெருமானின் வடிவமாகவே பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த மலையை சுற்றி அமைந்துள்ள 14 கிலோ மீட்டர் தொலைவுடைய கிரிவலப் பாதையில், பவுர்ணமி நாட்களில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

    ஆன்மிக முக்கியத்துவம் மட்டுமின்றி, சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு காரணங்களாலும், அண்ணாமலையார் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் மலைக்கு நேரடியாக ஏறுவதற்கு வனத்துறை கடும் தடை விதித்துள்ளது. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இந்தத் தடை, பக்தர்களின் பாதுகாப்பையும், மலையின் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், சின்னத்திரை நடிகையான அர்ச்சனா ரவிச்சந்திரன், சமீபத்தில் வனத்துறையினரிடம் எந்தவிதமான முன் அனுமதியும் பெறாமல், தடையை மீறி அண்ணாமலையார் மலை உச்சி வரை சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நடிகையின் இந்த செயல், சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஹாலிவுட் போயாச்சி.. எப்படியாவது ஜெயிக்கணும்..! திருப்பதி கோவிலில் மகன்களுடன் ரெக்வஸ்ட் வைத்த நடிகர் தனுஷ்..!

    actress arachana ravichandran

    அர்ச்சனா ரவிச்சந்திரன், மலை உச்சியில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தனது அனுபவத்தையும் விரிவாக பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், மலை ஏறி இறங்கும் போது தன்னால் கடும் சிரமங்களை சந்திக்க நேரிட்டதாகவும், குறிப்பாக இருள் சூழ்ந்து கொண்டதால் மிகுந்த அச்சம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாதை மிகவும் கடினமாக இருந்ததாகவும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைந்ததாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

    அதுமட்டுமின்றி, அவர் தனது பதிவில், “மலை ஏற்றம் செய்கிறீர்கள் என்றால் சீக்கிரமாகவே தொடங்குங்கள். எப்போதும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பே இறங்குவதை திட்டமிடுங்கள்” என்று அறிவுரை வழங்கியுள்ளார். இந்த வரிகள் தான் தற்போது பெரும் சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளன. ஏனெனில், மலைக்கு ஏறுவதற்கே வனத்துறை தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி சென்றவர், பிறருக்கும் மறைமுகமாக மலையேற்றத்தை ஊக்குவிப்பது போல் பதிவிட்டுள்ளதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து, பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. சிலர், “சட்டத்தை மீறிய செயலை சமூக வலைதளத்தில் பெருமையாக பகிர்வது தவறான முன்னுதாரணம்” என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், “பிரபலங்கள் என்பவர்கள் சமூகத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்” என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது. குறிப்பாக, இளம் ரசிகர்கள் அதிகமாக பின்தொடரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள், இவ்வாறு விதிமுறைகளை மீறி செயல்படுவது, பிறரையும் அதே பாதையில் செல்லத் தூண்டும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

    actress arachana ravichandran

    இதுபோன்ற சம்பவங்கள், எதிர்காலத்தில் பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, திருவண்ணாமலை வனத்துறையினர் விசாரணை தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் எந்த நாளில், எந்த வழியாக மலைக்கு சென்றார், அவருடன் வேறு யாராவது இருந்தார்களா, பாதுகாப்பு விதிமுறைகள் எவ்வாறு மீறப்பட்டன என்பதனைப் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், வனச்சட்ட விதிமுறைகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதும் விசாரணையின் முடிவில் தெரிய வரும் என வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இதற்கு முன்பும், திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் தடையை மீறி சிலர் ஏற முயன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த நேரங்களில், வனத்துறையினர் அபராதம் விதித்ததும், சில சமயங்களில் வழக்குப் பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது. அதனால், இந்த விவகாரத்திலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் அண்ணாமலையார் மலை, பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையுடன் தொடர்புடையவை. அதே நேரத்தில், அந்த பகுதி சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் சென்சிட்டிவ் பகுதியாகவும் கருதப்படுகிறது.

    வனப்பகுதியில் மனித நடமாட்டம் அதிகரிப்பதால், விலங்குகளுக்கு இடையூறு, தீ விபத்து அபாயம், இயற்கை வளங்கள் சேதமடையும் நிலை போன்ற பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால் தான், மலை ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்கள், குறிப்பாக திரைத்துறை பிரபலங்கள், தங்கள் செயல்கள் மற்றும் பதிவுகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்ற விவாதத்தை மீண்டும் முன்னிலைப் படுத்தியுள்ளது. ஒரு பக்கம் ஆன்மிகம் மற்றும் தனிப்பட்ட அனுபவம் என்ற பெயரில் செய்யப்பட்ட செயல், மறுபக்கம் சட்டம் மற்றும் சமூக பொறுப்பு என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

    actress arachana ravichandran

    வனத்துறையின் விசாரணை முடிவில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது இன்னும் தெரியாத நிலையில், இந்த சம்பவம் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே மீண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறலாம். சட்ட விதிகளை மதித்து, ஆன்மிக தலங்களின் புனிதத்தையும், இயற்கை வளங்களின் பாதுகாப்பையும் காக்க வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் அனைவருக்கும் நினைவூட்டியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: எனக்கு கிடைத்த ஒரே அதிர்ஷ்ட நடிகை இவர் தான்..! இயக்குநர் அட்லீ சொன்ன மறைமுக உண்மை..!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைகிறதா?... பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்...!

    தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைகிறதா?... பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    ரூ.121 கோடியில் 400 காவலர் குடியிருப்புகள்... காணொளி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் விஜய்..!

    ரூ.121 கோடியில் 400 காவலர் குடியிருப்புகள்... காணொளி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    அக்டோபருக்குள் முடியும் ‘தர்மன்’ ஷூட்டிங்..!! ரஜினி அளவுக்கு இனிமையானவரை நான் பார்த்ததே இல்லை.. அஷ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி..!

    அக்டோபருக்குள் முடியும் ‘தர்மன்’ ஷூட்டிங்..!! ரஜினி அளவுக்கு இனிமையானவரை நான் பார்த்ததே இல்லை.. அஷ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி..!

    சினிமா
    நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்!

    நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்!

    அரசியல்
    நேபாளம், சீனாவில் கொடூர வெள்ளம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டெரெஸ் இரங்கல்!

    நேபாளம், சீனாவில் கொடூர வெள்ளம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டெரெஸ் இரங்கல்!

    உலகம்
    அனுபமா – துருவ் காதல் சர்ச்சை.. கருத்து சொல்ல எனக்கு தகுதியில்லை..!! நடிகர் பகவதி சொன்ன காரசாரமான பதில் இதோ..!

    அனுபமா – துருவ் காதல் சர்ச்சை.. கருத்து சொல்ல எனக்கு தகுதியில்லை..!! நடிகர் பகவதி சொன்ன காரசாரமான பதில் இதோ..!

    சினிமா

    செய்திகள்

    தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைகிறதா?... பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்...!

    தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைகிறதா?... பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    ரூ.121 கோடியில் 400 காவலர் குடியிருப்புகள்... காணொளி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் விஜய்..!

    ரூ.121 கோடியில் 400 காவலர் குடியிருப்புகள்... காணொளி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்!

    நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்!

    அரசியல்
    நேபாளம், சீனாவில் கொடூர வெள்ளம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டெரெஸ் இரங்கல்!

    நேபாளம், சீனாவில் கொடூர வெள்ளம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டெரெஸ் இரங்கல்!

    உலகம்
    நேபாளத்தை ஏன் விடாமல் துரத்துகிறது பேரழிவு? 5 ஆண்டுகளில் நடந்த பயங்கர வெள்ளம், நிலச்சரிவுகளின் அதிர்ச்சி பின்னணி!

    நேபாளத்தை ஏன் விடாமல் துரத்துகிறது பேரழிவு? 5 ஆண்டுகளில் நடந்த பயங்கர வெள்ளம், நிலச்சரிவுகளின் அதிர்ச்சி பின்னணி!

    இந்தியா
    “சுட்டு பிடிங்க...” - உச்சக்கட்ட கொந்தளிப்பில் மக்கள்... தொகுதி முழுக்க எடுத்த அதிரடி முடிவு...!

    “சுட்டு பிடிங்க...” - உச்சக்கட்ட கொந்தளிப்பில் மக்கள்... தொகுதி முழுக்க எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share