90-களில் தெலுங்கில் அறிமுகமாகி, தமிழில் ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் மூலம் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த ரம்பா, தொடர்ந்து ‘அருணாச்சலம்’, ‘காதலா காதலா’, ‘மின்சார கண்ணா’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிப் படங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த அவர், பின்னர் கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார்.

கனடாவில் கணவர், மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிற ரம்பா, சமூக வலைதளங்களிலும் அடிக்கடி தனது குடும்ப தருணங்களை பகிர்ந்து, ரசிகர்களுடன் தொடர்ந்த தொடர்பை பேணிக் கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் மிகவும் தனிப்பட்ட விஷயத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். பச்சைக் குத்துதல் என்பது தனது வாழ்க்கையில் ஒரு போதும் யோசித்த விஷயம் இல்லை என்பதையும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 41வது பிறந்தநாளை கொண்டாடும் ராம் சரண்..! ‘பெத்தி’ படத்தின் பிரமாண்ட ‘கிளிம்ப்ஸ்’ வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!
அதில் “எனக்கு பச்சைக் குத்தி கொள்ளும் எண்ணம் ஒருபோதும் இல்லை. ஊசியை பார்த்தாலே எனக்கு பயம். மூன்று குழந்தைகள் பிறந்த பின்னரும் அந்த பயம் மாறவில்லை.” திருமணத்திற்குப் பிறகு, கணவரின் பெயரை பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆசை மனதில் உண்டானதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் வாழ்க்கை வேகமாக மாறியதால் அந்த ஆசை நிறைவேறவில்லை.

“திருமணமாகி சில மாதங்களிலேயே ஒருவருக்கொருவர் பிறந்தது போல தொடர்ந்து மூன்று குழந்தைகள் எனக்கு பிறந்தார்கள். எனவே பச்சைக் குத்திக் கொள்ளும் திட்டமே தள்ளிப்போய்விட்டது.” ரம்பா நகைச்சுவையாக கூறிய மற்றொரு பகுதி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “இப்போது குத்த வேண்டுமென்றால், என் கணவர், மூன்று குழந்தைகள்—மொத்தம் நான்கு பேரின் பெயரையும் குத்திக் கொள்ள வேண்டியிருக்கும். அது என்னால் முடியாது. காரணம் அந்த வலியைத் தாங்குவது எனக்கு அரிது” என்றார்.
இவ்வாறு பேசிய ரம்பா, தன்னைப் பற்றி ரசிகர்கள் அறியாத பல விஷயங்களை சிரிப்பும் சீரியசும் கலந்த வடிவில் பகிர்ந்துள்ளார். ரம்பா மீண்டும் சினிமாவுக்கு வரத் தயாராகி வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கனடாவில் குடும்பத்துடன் தங்கி இருந்தாலும், இந்தியாவுக்கு அடிக்கடி வருகை தரும் அவர், சரியான கதாபாத்திரம் கிடைத்தால் வெள்ளித்திரையில் மீண்டும் பிரவேசிக்கத் தயாராக உள்ளதாக முன்பே குறிப்பிட்டிருந்தார்.

90-கள் ரசிகர்களுக்கு ‘கனவு கன்னி’யாக இருந்த ரம்பா, இன்று மும்மக்கள் தாயாக மாறியும் அதே புத்துணர்ச்சியுடன் காணப்படுவது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. சமீபத்திய பேட்டியின் பின், ரம்பா குறித்து சமூக வலைதளங்களில் மீண்டும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலை குடும்பத்தில் மீண்டும் போலீஸ்..! ஷாக்கில் முத்து - மீனா.. வயித்தெரிச்சலில் விஜயா - மனோஜ்.. சிறகடிக்க ஆசையில் இன்று..!