தமிழ் சினிமாவில் சமீப காலமாக புதிய தலைமுறை நடிகைகள் பலர் தங்கள் திறமையால் தனி இடத்தை பிடித்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது மிகவும் பேசப்படும் பெயராக மாறியிருக்கிறார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.

அவர் நடித்த “லோகா” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் வெற்றி கண்டது.
இதையும் படிங்க: ஆர்ப்பாட்டத்தை கொஞ்சம் குறைச்சிக்கோங்க ரசிகர்களே..! ரஜினி - கமல் படத்தின் புது போஸ்டர் ரிலீஸ்..!

இந்த வெற்றி, கல்யாணியின் திரை பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

“லோகா” திரைப்படம் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல், ஹிந்தி பேசும் மாநிலங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றதாக கூறப்படுகிறது.

டிஜிட்டல் தளங்களில் வெளியான பின்னரும் படம் தொடர்ந்து பார்வையாளர்களை கவர்ந்தது.

குறிப்பாக, கல்யாணியின் இயல்பான நடிப்பு, திரையில் வெளிப்பட்ட தன்னம்பிக்கை மற்றும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்த விதம் ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றது.

இதன் விளைவாக, அவருக்கு பல மொழிகளில் இருந்து புதிய வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், கல்யாணி தற்போது ஹிந்தி திரையுலகில் முக்கியமான ஒரு திட்டத்தில் கமிட் ஆகியுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர் ஜோடியாக “Pralay” என்ற படத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கவர்ச்சியிலோ.. கிளாமரிலோ இல்லை அழகு..! சிம்பிள் ஆடையில் சிரித்தபடி இருப்பதே அழகு.. நிரூபித்த நடிகை தமன்னா..!