ஒரே ஒரு இசை வெளியீட்டு விழாவை வைத்து அதில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரை சிறப்பு விருந்தினராக அழைத்து, "உயிரின் உறவே தமிழே...! எனது வாழ்க்கையும் குடும்பமும் அனைத்தும் தமிழ் மொழி மட்டும்தான். எனது குடும்பம் அனைத்தும் இங்குதான் இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமாரும் இங்கு வந்துள்ளார். அவரது மொழி கன்னடம், ஆனால் தமிழ் மொழியிலிருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமானவர்" என சொல்லி இன்று இணையதளத்தை தொட்டாலே கரண்ட் ஷாக் அடிப்பதை போல் அவருடைய செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கிறது.

கன்னட மொழியை கமலஹாசன் அவமதித்துவிட்டார் எனவும் இவர் என்ன தமிழ் வல்லுனரா எனவும் பலரும் கேள்விகளை கேட்டு தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் கர்நாடகர்கள். அது மட்டுமல்லாமல் சில அரசியல் கட்சிகளும் இதில் தலையிட்டு நடிகர் கமலஹாசன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என பிடிவாதம் பிடித்து வருகின்றனர். அதையும் மீறி அவர் மன்னிப்பு கேட்காமல் படத்தை வெளியிட்டால் தியேட்டர்களை அடித்து உடைப்போம் கொளுத்துவோம் எனவும் எச்சரித்து வருகின்றனர். இதனால் கமலஹாசனின் கன்னட ரசிகர்களும் பெரிதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க இத்திரைப்படத்தை கர்நாடக்காவில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வெளியிடவும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடியது நடிகர் கமலஹாசனின் தரப்பு.
இதையும் படிங்க: "If you are bad i am your dad" வதந்தி பரப்புகிறவர்களுக்கு தனுஷ் சொன்ன தக் பதில்..!

இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிகள், கமலஹாசன் என்ன மொழி வல்லுனரா என கேள்வி கேட்டதுடன் உங்கள் படத்துக்கு பாதுகாப்பு தருவதெல்லாம் இரண்டாவது விஷயம், மொழியைப் பற்றி பேசி மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறீர்கள் ஆதலால் முதலில் நீங்கள் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என காலக்கெடு கொடுத்து உத்தரவிட்டனர். இதனை அடுத்து, அறிக்கை ஒன்றை வெளியிட்ட நடிகர் கமலஹாசன், " நான் கன்னட மொழி மட்டுமல்ல அனைத்து மொழிகளையும் மதிக்க கூடியவன். ஆதலால் தான் மொழியின் அடிப்படையில் சிவராஜ்குமார் எனது குடும்பம் என தெரிவித்து இருந்தேன். நான் கூறிய தகவல் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என தெரிவித்து இருந்தார்.

இதனைப் பார்த்த நீதிபதி நடிகர் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள விஷயங்கள் எல்லாம் சரிதான். ஆனால் இதில் மன்னிப்பு என்ற வார்த்தைகளே இல்லையே என கூறினார். அதற்கு நடிகர் கமலஹாசனின் தரப்பில் இருந்து தவறாக பேசியிருந்தால் தானே மன்னிப்பு கேட்க வேண்டும் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதற்கு எதற்காக மன்னிப்பு என கேட்டனர். இதனை அடுத்து பேசிய நீதிபதி, ஒரு மன்னிப்பு தானே அதைக் கேட்பதில் அப்படி என்ன உங்களுக்கு ஈகோ என காட்டமாக பேசியிருந்தார். இப்படி இருக்க, நடிகர் கமலஹாசன் ஒருபொழுதும் தன்மானத்தை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் எனவும் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என்பதில் உறுதியாக இருக்கும் அவரை மன்னிப்பு கேட்க வைக்க யாராலும் முடியாது என கன்னட ரசிகர்களே அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகம் மட்டுமல்லாது பல இடங்களில் வாழும் மக்கள் அனைவரும் "வி ஸ்டாண்ட் கமலஹாசன்" என இணையதளங்களில் பதிவிட்டு அவருக்கு தங்களது ஆதரவு குரலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாளை நடிகர் கமலஹாசனின் தக் லைஃப் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. மேலும், நாளை காலை 9 மணியிலிருந்து இரவு 2 மணி வரை சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இப்படி இருக்க, பல போராட்டங்களை நடத்தினாலும் கர்நாடகாவில் தக்லைஃப் திரைப்படம் வெளியிடவில்லை என்றாலும் அதைப்பற்றி கவலையில்லை நான் மன்னிப்பு கேட்க போவதில்லை என நடிகர் கமலஹாசன் அமர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ஒரு முடிவு ஒன்றை எடுத்து உள்ளது.

அதன்படி, கர்நாடகாவிலும் நடிகர் கமலஹாசனின் ரசிகர்கள் அதிகமாக இருப்பதாலும், ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றப்படாமல் இருப்பதற்காகவும் நாளைய தினத்தில் கமலின் தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட விரும்புகிறோம் என்றும் இதற்காக நடிகர் கமலஹாசன் உடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் சமூகமான தீர்வுகள் கொண்டுவரப்பட்டால் நாளை தினம் கண்டிப்பாக கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியிடப்படும் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் நரசிம்மலு தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: தக் லைஃப் பட முத்தக்காட்சி சர்ச்சை..! அதிரடி பதிலால் ஆஃப் செய்த நடிகை அபிராமி..!