ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், எல்.எல்.பி மற்றும் அமிகோ க்ரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பில், இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் நடிகர் தனுஷ், நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அவர்களுடன் இணைந்து நடித்து உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கிட்டத்தட்ட ரூபாய் 102 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஃபேன் இந்தியா படமாக வெளியாகி இருக்கிறது.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டு காலமாக இத்திரைப்படம் எடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த படத்தை தரையில் காணும் மக்கள் அதனுடைய அனுபவத்தை பகிர்ந்து வருகிறார்களா என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். "குபேரா" திரைப்படத்தின் கதை என பார்த்தால், " மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் நிரஞ், இந்தியாவில் எண்ணெய் வலம் கிடைக்க இருப்பதை தெரிந்து கொள்கிறார். ஆனால் இதனை அவர் மக்களுக்கு தெரிவிக்காமல் மிகவும் அமைதி காத்து வருவதுடன் அதனை பணமாக்க திட்டமிட்டு பிரபல அரசியல் தலைவரான ஹரிஷ் உடன் மிகவும் அழகாக திட்டம் தீட்டி சதி செய்கிறார். மேலும் அதிலிருந்து வரக்கூடிய லாபங்கள் அனைத்தையும் கொள்ளை அடிக்கிறார். இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருப்பதற்காக பல அரசியல் தலைவர்களுக்கு கோடி கோடியாக லஞ்சங்களை வாரி குவிக்கிறார்.
இதையும் படிங்க: காமெடிக்கு நாங்க கேரண்டி.. நகைச்சுவையில் மக்களை கவர்ந்த நடிகர் அமீர்கான்.. "சித்தாரே ஜமீன் பர்" விமர்சனம்..!

மேலும் இந்த பணங்களை பல தலைகளுக்கு பட்டுவாடா செய்வதற்காக ஜெயிலில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நாகார்ஜுனாவான 'தீபக்' மூலம் செய்கிறார். இதில் தீபக் (நாகர்ஜுனா) இந்தப் பணங்களுக்கு பினாமிகளை தயார் செய்து எந்த பிரச்சனையும் இல்லாமல் பணத்தை பரிமாற்ற திட்டம் போடுகிறார். அப்பொழுது தான் திருப்பதியில் இருக்கும் 'தேவா' என்கின்ற தனுஷ், குஷ்பூ, திவ்யா என நான்கு பேரை தேர்வு செய்கிறார். இதனை அடுத்து, பிச்சைக்காரர்களான இவர்கள் அனைவரையும் குளிப்பாட்டி அவர்களுக்கு ஆடைகளை கொடுத்து அவர்கள் பெயரில் பல பொய்யான நிறுவனங்களை உருவாக்கி, அவர்களைப் பார்த்தாலே மிகப் பெரிய பணக்காரர்கள் என்று சொல்லும் அளவிற்கு அவர்களுடைய மொத்த லுக்குகளையும் மாற்றி அவர்கள் மூலமாக பணத்தை கைமாற்றுவதும் பின்பு பணம் சென்று சேர்ந்த உடனே அந்த பிச்சைக்காரர்களை கொலை செய்வோம் என நாகர்ஜுனா திட்டம் தீட்டுகின்றார்.

அனால் இதிலிருந்து எப்படியோ தேவா (தனுஷ்) தப்பித்து விடுகிறார். தப்பித்த அவருடன் சமீரா என்கின்ற ராஷ்மிகா மந்தனா எப்படி சிக்கிக் கொள்கிறார் கடைசி கிளைமாக்ஸ்சில் படம் என்ன ஆகிறது என்பதுதான் இந்த 'குபேரா' படத்தின் கதையாக இருக்கிறது. இப்படி இருக்க, இந்த கதையை குறித்து அளசி பார்த்தால், உண்மையிலேயே இந்த திரைப்படம் தனுசுக்கு அசுரன் திரைப்படம் போல் தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடிகர் தனுஷின் திரைப்படம் என்றாலே அதில் அவரது அசுரத்தனமான நடிப்பு வெளிப்படும். அதேபோல்தான் இந்த படத்திலேயும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் இந்த முறை அவருக்கு ஆஸ்கர் விருது கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்லும் அளவிற்கு திரைப்படத்தில் நடித்ததுடன் ரசிகர்களின் பெரிய ஆதரவை பெற்று இருக்கிறார்.

பெரிய ஹீரோ என்ற ரோலில் வராவிட்டாலும் பிச்சைக்காரனான ரோலில் வந்து இந்த உலகத்தில் நாங்களும் மனிதர்கள் தான். பிச்சைக்காரர்களாய் இறந்து போகின்ற எங்களையும் நாய் வண்டியில் ஏற்றாதீர்கள். எங்களது சடலங்களை தூக்கி வீசாமல் எங்களது உடலை நீங்கள் எரித்தால் நாங்கள் மீண்டும் பிச்சைக்காரர்களாக இந்த உலகத்தில் பிறக்க மாட்டோம் என்று சொல்லும் இடங்களில் எல்லாம் கண் கலங்க வைத்திருக்கிறார் இயக்குனர் என்றே சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இயக்குனரின் சிறந்த விஷயம் என்று பார்த்தால் படத்தை தொடங்கியவுடன், உலகத்தையே சுற்றி பின்பு கதையின் கருவிற்கு செல்லாமல் எடுத்த உடனேயே படத்தின் மைய கதைகள் நோக்கி சென்றது தான் படத்தின் சிறப்பு. மேலும் இந்த திரைப்படத்தின் வில்லனான ஜிம்சர்ப் எப்படிப்பட்டவர் என்பதையும், அவருடைய இலக்கு என்ன என்பதையும் அசால்டாக காமித்து இருக்கிறாய் இயக்குனர்.

மேலும், லஞ்ச வழக்கில் சிக்கி சிறையில் இருக்கக்கூடிய நாகார்ஜுனாவை தனது வேலைக்காக எப்படி பயன்படுத்துகிறார் என்பதையும் வெளியே வரும் அவர் கதையில் எப்படி பயணிக்கிறார் என்ற விதங்களையும், தன்னிடமிருந்து தப்பித்துப் போன நடிகர் தனுஷை மீண்டும் பிடிக்க நாகர்ஜுனா செய்யும் பலத்தில்லாலங்கடி வேலைகளையும் படத்தில் அற்புதமாக காண்பித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கடைசி வரையிலும் அனைவரிடமும் இருந்து நடிகர் தனுஷ் போராடுவதும் கடைசியில் அவருடன் நாகர்ஜுனாவும் இணைந்து போராடுவதும் எல்லாம் படத்தின் கூஸ்பம் காட்சிகளாக இருக்கிறது. இப்படி இருக்க இத்திரைப்படத்தின் மேக்கிங் அனைத்தும் மாஸாக இருக்கிறது. படத்தின் இசைதான் படத்திற்கு மிகப்பெரிய பலத்தையே கூட்டி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ராஷ்மிகாவை தனுஷ் பார்ப்பதும் அவருடைய கதையை கேட்பதும் பின்பு 'போய் வா நண்பா' பாடல் அனைத்தும் இப்படத்தில் சரவெடி காட்சிகளாகவே இருந்தது.

இப்படி படத்தில் அனேக ப்ளசுகள் இருந்தாலும் சில மைனஸ்கள் இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில் இப்படத்தின் கிளைமாக்ஸ் நோக்கி படம் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் படத்தில் எந்தவிதமான திருப்பமும் இல்லாமல் படம் அப்படியே போகிறது. அதுமட்டுமில்லாமல் வெறும் பழி வாங்கும் உணர்வை மட்டுமே வைத்து படத்தை முடித்து இருப்பது ரசிகர்களுக்கு சற்று அதிருப்தி தான். அதுமட்டுமில்லாமல் " பிரமோஷனில் ராஷ்மிகா மந்தனாவை பார்த்த ரசிகர்கள் அவருடைய போர்ஷன் மிகவும் அழகாக இருக்கும் என்று நினைத்தனர் ஆனால் இந்த திரைப்படத்தில் அவரது போஷன் மிகவும் குறைவாகவே இருப்பதால் அவருக்கு இன்னும் நிறைய போர்ஷனை கொடுத்திருக்கலாம்" என்று தோன்றுகிறது. எமோஷனல் ஆகவே இருக்கிறது. பல இடங்களில் லாஜிக் மீறல்கள் அதிகமாகவே எட்டிப் பார்க்கின்றன.

ஆனாலும் படத்தில் இத்தனை மைனஸ்களை நாம் சொன்னாலும் படம் வெற்றி படமாகவே அமையும் எனவும் தனுஷின் பிளாக்பஸ்டர் திரைப்படமாக குபேரா திரைப்படம் அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
இதையும் படிங்க: ஒரே அடியில் மனைவியின் வாயை உடைத்த விஷ்ணு குமார்..! கர்மாஸ் பூமராங்கில் நடந்தது என்ன..?