"தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு" என்று கூறுகிறார்கள் என்றால் அந்த அடைமொழி வார்த்தைக்கு சொந்தக்காரரே கேப்டன் விஜயகாந்த் தான். இவரது படம் எந்த அளவிற்கு ஃபேமஸோ அதே அளவுக்கு இவரது அரசியல் செயல்பாடுகளும் ஃபேமசாக இருந்தது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களிடம் தைரியமாக பேசும் ஒரே மனிதர் என இன்றும் மக்கள் அவரைப் பற்றிய புகழாரங்களை சூட்டி வருகின்றனர். இவரது மேடைப் பேச்சுக்களில் என்னதான் இவர் கேலிக்கிண்டல்கள் செய்யப்பட்டாலும், ஒரு மேடையில் "என்னடா காசு காசு காசு, வரும்போது ஒன்றும் கொண்டு வரல, போகும்போது ஒன்றும் கொண்டு போக போறது இல்ல, கடைசில அர்னாகொடி வரைக்கும் அறுத்துட்டு தான் புதைக்க போறாங்க.
இதையும் படிங்க: என் எழுத்துக்கள் எல்லாம் உங்கள் தலைப்பாகுமா..!! கவிஞர் வைரமுத்து காட்டம்..!

உங்க வீட்டுக்கு வந்தா ஒரு படி சோறு போட மாட்டீங்களா.." எனக்கேட்டு அனைவரையும் கண்கலங்க வைத்த உண்மையான மனிதன். இவரது இறப்பு என்பது அனைவருக்கும் பேரிடியாக விழுந்தது. அவரது மறைவின் பொழுது கருடன் பறந்தது எல்லாம் செய்திகளில் விமர்சையாக பேசப்பட்டது. அவர் மரணித்த இந்த வேளையிலும் அவர் உருவாக்கிய கட்சி அலுவலகத்தில் இன்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவளிக்கப்பட்டு வருகிறது. அப்படி மறைந்தாலும் மக்கள் மனதில் மறவாமல் இருப்பவர்தான் விஜயகாந்த்.

அந்த வகையில் அவரது மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் 'படைத்தலைவன்' என்ற படம் சமீபத்தில் வெளியாக இருந்தது. இப்படத்திற்கான வேலைகளும் மும்முறமாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் இப்பட இசை வெளியீட்டு விழாவில் பிரேமலதா விஜயகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், சசிகுமார் என அனைவரும் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக்கினர். இந்த சூழலில், நாளை படம் வெளியாக உள்ள இந்த வேளையில் திரையரங்குகள் கிடைக்காத காரணத்தினாலும், ரூபாய் 10 கோடி அளவுக்கு ஏற்பட்ட செட்டில்மெண்ட் பிரச்சினைகளாலும் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

ஆனாலும் சொன்ன நேரத்திற்கு படம் வெளியாக வேண்டும் என பிரேமலதா விஜய்காந்த் ஒரு புறம் பிரஷர் கொடுத்து வந்தாலும், இவர்கள் படம் வெளியாகும் வேளையில் நடிகர் விஜய் சேதுபதியின் 'Ace' படம் ரிலீஸ் ஆனதாலும், சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' மற்றும் சூரியன் 'மாமன்' படம் ஆகியவையும் திரையரங்குகளை முழுவதுமாக கையில் எடுத்து கொண்டதாலும் அவருடைய படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

இருப்பினும் மனம் தளராத விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் அவரது இன்ஸ்டா ஸ்டோரியில், "அனைவருக்கும் வணக்கம், "படைத்தலைவன்" திரைப்படம் மே 23ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், திரையரங்கு ஒதுக்கிட்டு சிக்கல்களின் காரணமாக பட வெளியீடு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேசிய வெளியிட்டு தேதியை விரைவில் உறுதி செய்து அறிவிக்க உள்ளோம். இந்த இடையூறுக்கு மன்னிக்கவும். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி" என தெரிவித்து இருந்தார்.

இப்படியான சூழலில் படைத்தலைவன் திரைப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், இந்த முறை எந்த வித பிரச்சனையும் இல்லாமல் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இப்படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த்தை ஏய் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீண்டும் இப்படத்தில் நடிக்க வைத்துள்ளதாகவும் அவர்மீது அன்புவைத்துள்ள அவரது ரசிகர்கள் இப்பாடத்தை பார்த்து தனது மகனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
இதையும் படிங்க: என் எழுத்துக்கள் எல்லாம் உங்கள் தலைப்பாகுமா..!! கவிஞர் வைரமுத்து காட்டம்..!