இலக்கணங்களையும் இலக்கியங்களையும் கொண்ட பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு உருவான மொழி நம் தமிழ் மொழி. அப்படிப்பட்ட தமிழ் மொழியில் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உண்டு. அதுமட்டுமல்லாமல் தமிழ் மொழியிலிருந்து தான் பிற மொழிகள் பிரிந்துள்ளது என பல மொழி வல்லுனர்கள் நிரூபித்து வருகின்றனர். இப்படிப்பட்டதான வேலைகளில் தமிழில் அதிகப்பற்று உள்ள மனிதர்கள் இங்கு பெரும்பாலானவர்கள் இருக்கின்றனர்.

குறிப்பாக தற்பொழுது தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் பொழுது தமிழைப் பற்றி பேசிய நடிகர் கமலஹாசனை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட மக்கள் தெரிவித்து வந்தது நம் அனைவருக்கும் தெரியும். அதில் அவர், தவறுதலாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்பேன்.. தவறாக புரிந்து கொண்டதற்கெல்லாம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறியிருப்பார். அதுபோலதான் தமிழ் தமிழில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்களை நம்மால் பிரித்துப் பார்க்க முடியும் அந்த அளவிற்கு தமிழ் மிகவும் பழமையான மொழியாக இருக்கிறது.
இதையும் படிங்க: மண்சோறு சாப்பிட்டா படம் ஓடுமா..? விளாசிய சூரி.. பாராட்டிய வைரமுத்து...!

இப்படிப்பட்ட தமிழ் மொழியில் இன்று நாம் கேட்கும் அநேக பாடல்களாக இருந்தாலும் சரி, பல இசை வல்லுனர்கள் தங்கள் பாடல் திறமைகளை வெளியே கொண்டு வந்தாலும் சரி, அந்த இசைகளுக்கு மெருகேற்றுவது என்றால் அது பாடல் வரிகள் தான்... குறிப்பாக தனது தாயைப் பற்றி பிள்ளைகள் நினைக்க வேண்டும் என்றால், "அம்மா என்றழைக்காத உயிரில்லையே...", அப்பாக்களை குறித்து நினைத்துப் பார்க்க வேண்டும் என்றால், "தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே", இப்படி தமிழ் மொழியில் உலகில் உள்ள அனைத்து தாய் தந்தை சகோதரி, காதல், திருமணம், பிரிவு, காதல் வலி, மரணம் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பாடல்களை வைத்து ஒருவர் சோகமாக இருந்தாலும் சந்தோஷமாக இருந்தாலும் அனைத்திற்கும் பாடல்கள் எவ்வளவு முக்கியமோ அதற்குண்டான வரிகளும் மிகவும் முக்கியமாக இருக்கிறது.

அதன்படி தான், தமிழில் பல வருடங்களாக பாடல் ஆசிரியர்கள் என கூறினால் அது கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி என சொல்லலாம். இவர்கள் இருவரது எழுத்துக்களை பாட்டாக பார்க்கும் பொழுது அது ஒரு அர்த்தத்தில் இருந்தாலும் அதனை நாம் படித்துப் பார்க்கும் பொழுது அதில் ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கி இருப்பார். இவர்களின் வழியாய் வந்தவர்தான் கவிஞர் வைரமுத்து. பலராலும் கவிப்பேரரசு என கொண்டாடப்படும் இவர் தமிழ் சினிமாவில் பாடல்கள் எழுதுவதைத் தாண்டி, உலகில் இலக்கியத்தில் தனக்கென இடத்தைப் பிடித்தவர். இவர் எழுதிய பல கவிதை தொகுப்புகளும் நாவல்களும் இன்றும் மக்களால் பேசப்பட்டு வருகிறது.

கவிஞர் வைரமுத்துவின் மேல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாடகி சின்மயி பாலியல் அத்துமீறலுக்கு உண்டான புகாரை அளித்திருந்தார். அவரது இந்த குற்றச்சாட்டு வைரமுத்துவிற்கு பெரும் அடியாக இருந்தாலும் அதனை அவர் சமாளித்து வெளியே வந்தார். இப்படி இருக்க, ஒவ்வொரு முறையும் தனது கருத்துக்களை எக்ஸ்ட்ரா வாயிலாக வெளியிடும் கவிஞர் வைரமுத்து இன்று மிகவும் காட்டமான பதிவை பதிவிட்டு உள்ளார். அதில் "என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை ஒன்றா இரண்டா... பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுகிட்டேன், பனிவிழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா, ஈரமான ரோஜாவே,

நிலாவத்தான் கையில புடிச்சேன், மெளன ராகம், மின்சாரக் கண்ணா, கண்ணாளனே, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப் பார், தென்மேற்குப் பருவக்காற்று, விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன், இப்படி இன்னும் பல... சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை காணும் இடங்களில் கேட்டதுமில்லை செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன் ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது ஆனால் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?" என தெரிவித்துள்ளார்.

அவரது இந்த பதிவுக்கு நெட்டிசன்களில் ஒருவர், "அப்படி பார்த்தீங்கன்னா யாரும் எதையும் உபயோக படுத்த முடியாது. உங்களின் பாடல் வரிகளில் வந்துள்ள வார்த்தைகள் முன்பு எப்போதோ ஏதோ ஒரு புத்தகத்திலோ, நாவலிலோ, சிறுகதையிலோ, ஏன் கவிதையில் கூட வந்து இருக்கலாம். அதற்கு அவர்கள் உரிமை கொண்டாடினால்? உங்கள் பாடலை முழுவதும் எடுத்தால் கேட்கலாம்" என தனது கருத்தை கமெண்டாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பேண்ட் சொக்காவில் அசத்தும் லாஸ்லியா..! லேட்டஸ்ட் ட்ரெண்டிங் போட்டோஸ்..!