• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ரோகிணியை அடித்து உதைத்த மீனா Friend's..! குதூகலத்தில் கொண்டாடும் 'சிறகடிக்க ஆசை' ரசிகர்கள்..!

    'சிறகடிக்க ஆசை'யில் ரோகிணியை அடித்து உதைத்த மீனா Friend'sயை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    Author By Bala Wed, 21 Jan 2026 11:48:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-siragadikka-aasai-serial-jan-21-episode-tamilcinema

    தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் சீரியல்களில் முக்கியமான ஒன்றாக ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் இருந்து வருகிறது. குடும்ப உறவுகள், மறைக்கப்பட்ட ரகசியங்கள், திடீர் திருப்பங்கள் என ஒவ்வொரு எபிசோடும் பார்வையாளர்களை கட்டிப்போடும் வகையில் நகர்ந்து வருகிறது. அந்த வரிசையில், இன்றைய எபிசோடு உணர்ச்சிகள், கோபம், அதிர்ச்சி, வன்முறை என பல்வேறு அம்சங்கள் கலந்து, இதுவரை இல்லாத அளவுக்கு சீரியஸான காட்சிகளுடன் ஒளிபரப்பாகியுள்ளது.

    கடந்த சில எபிசோட்களாகவே ரோஹினி கதாபாத்திரத்தை மையமாக வைத்து பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. அதில் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது, ரோஹினி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும், அவரது மகன் தான் க்ரிஷ் என்பதும் அண்ணாமலை குடும்பத்தினருக்கு தெரிய வந்த தருணம். இந்த உண்மை வெளிவந்த உடனே, அண்ணாமலை குடும்பம் முழுவதும் ஒரே நேரத்தில் ஷாக்கில் உறைந்தது. குறிப்பாக, எப்போதும் தன்னடக்கம், நிதானம், குடும்ப கௌரவம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி பேசும் அண்ணாமலைக்கு இந்த தகவல் மிகப்பெரிய மனவேதனையை ஏற்படுத்தியது.

    ரோஹினியை மருமகளாக ஏற்றுக்கொண்டு, குடும்பத்தில் ஒருவராக நினைத்த நிலையில், அவர் இவ்வளவு பெரிய உண்மையை மறைத்து வந்திருக்கிறார் என்பதே குடும்பத்தினரை உடைத்துப் போட்டது. அந்த சோகத்திலும் குழப்பத்திலும் இருந்து இன்னும் யாரும் முழுமையாக வெளியே வராத நிலையில், அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கின.

    இதையும் படிங்க: 11 நாட்களில் Centurie அடித்த 'பராசக்தி'..! மொத்த வசூலை மகிழ்ச்சியுடன் அறிவித்த படக்குழு..!

    siragadikka-aasai-serial-jan-21

    அந்த நேரத்தில், வித்யா வீட்டிற்கு வந்து ரோஹினி குறித்து அவர் செய்த மற்ற விஷயங்களையும் ஒவ்வொன்றாக கூற தொடங்கினார். ரோஹினியின் சூழ்ச்சிகள், பொய்கள், குடும்பத்தினரை ஏமாற்றிய விதம், குறிப்பாக முத்துவை சுற்றி அவர் பின்னிய சதி திட்டங்கள் என அனைத்தையும் கேட்டு அண்ணாமலை குடும்பம் மீண்டும் ஒரு முறை அதிர்ச்சியில் மூழ்கியது. வித்யாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் குடும்பத்தின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இருந்தது.

    இதனை கேட்டவுடன், இதுவரை அமைதியாக இருந்த அண்ணாமலை, இனி பொறுமையை இழந்து கடும் முடிவை அறிவிக்கிறார். “இனி ரோஹினி இந்த வீட்டு மருமகள் கிடையாது. சீக்கிரமாக விவாகரத்து வாங்க வேண்டும்” என்று அவர் கூறும் காட்சி, இன்றைய எபிசோட்டின் முக்கிய திருப்பமாக அமைந்தது. அந்த ஒரு வசனமே, குடும்பத்திற்குள் இனி எதுவும் பழையபடி இருக்காது என்பதை தெளிவாக உணர்த்தியது.

    இதற்கிடையில், இன்னொரு பக்கம், ரோஹினியின் உண்மை முகம் இன்னும் கொடூரமாக வெளிப்படும் சம்பவமும் நடக்கிறது. முத்துவை கொலை செய்ய ரோஹினி போட்டிருந்த திட்டம் குறித்து, மீனா அம்மாவிற்கும், அவருடன் வேலை செய்து வந்த மற்ற பெண்களுக்கும் தெரிய வருகிறது. இந்த தகவல் வெளிவந்ததும், அவர்கள் அனைவரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்துகின்றனர். ஒரு குடும்ப உறுப்பினரை கொலை செய்யும் அளவுக்கு ரோஹினி கீழிறங்கியிருப்பது அவர்களை வெகுவாகக் காயப்படுத்துகிறது.

    siragadikka-aasai-serial-jan-21

    கோபத்தின் உச்சத்தில், மீனா அம்மா மற்றும் மற்ற பெண்கள், சத்யாவின் உதவியுடன் ரோஹினியை வரவழைக்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் காட்சி, இன்றைய எபிசோட்டில் மிகவும் பரபரப்பாகவும், சற்றே வன்முறையுடனும் காட்டப்பட்டுள்ளது. ரோஹினியை வண்டியில் ஏற்றி, அடி அடியென செமையாக அடிக்கும் காட்சிகள், ரசிகர்களிடையே பலவிதமான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. சிலர் “ரோஹினிக்கு இது தேவை தான்” என கூற, மற்றவர்கள் “இவ்வளவு வன்முறை தேவையா?” என கேள்வி எழுப்புகின்றனர்.

    இந்த சம்பவம் பற்றி தெரிந்ததும், முத்து மற்றும் மீனா இருவரும் ரோஹினியை பார்க்க விரைந்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, முத்து இந்த விஷயத்தில் ரோஹினி மீது கோபப்படாமல், மீனா அம்மா மற்றும் மற்ற பெண்கள் மீது கடும் கோபத்துடன் செல்கிறார். “எப்படி ஒருவரை இப்படிச் செய்ய முடியும்?” என்ற அவரது கோபம், கதையில் இன்னொரு உணர்ச்சிப்பூர்வமான மோதலை உருவாக்குகிறது. இது முத்துவின் மனநிலையையும், ரோஹினியுடன் உள்ள அவனது குழப்பமான உணர்வுகளையும் வெளிப்படுத்தும் முக்கிய தருணமாக அமைந்துள்ளது.

    அடி வாங்கி, மனதளவில் முற்றிலும் உடைந்த நிலையில், ரோஹினி நேராக மனோஜ் இருக்கும் ஷோரூமுக்கு செல்கிறார். அங்கே அவர் மனோஜை கட்டியணைத்து, உடைந்து அழும் காட்சி, இன்றைய எபிசோட்டில் சற்றே அமைதியான, ஆனால் ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தருணமாக இருந்தது. தனக்கு ஆதரவாக இருப்பார் என நினைத்த மனோஜிடம் அவர் தன் வேதனையை பகிர முயற்சிக்கிறார். ஆனால், அந்த தருணத்திலேயே மனோஜின் பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. “நீ இங்கிருந்து செல்லவில்லை என்றால், கண்டிப்பாக நானே உண்மை அடித்துவிடுவேன். உடனே வெளியே போ” என்று அவர் கூறுவது, ரோஹினிக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் பெரிய ஷாக்காக அமைந்துள்ளது.

    siragadikka-aasai-serial-jan-21

    இதுவரை ஓரளவு ஆதரவாக இருந்த மனோஜ் கூட இப்போது முழுமையாக விலகி நிற்பது, ரோஹினியின் தனிமையை இன்னும் தீவிரமாக காட்டுகிறது. மொத்தத்தில், இன்றைய ‘சிறகடிக்க ஆசை’ எபிசோடு வழக்கமான மென்மையான குடும்ப சீரியல் போக்கிலிருந்து விலகி, கடும் சீரியஸான திருப்பங்களுடன் நகர்ந்துள்ளது. ரோஹினியின் உண்மை முகம் முழுமையாக வெளிச்சத்திற்கு வரும் இந்த கட்டத்தில், அண்ணாமலை குடும்பம் எடுக்கும் முடிவுகள், முத்து – மீனா உறவில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், ரோஹினியின் அடுத்த நகர்வு என்ன என்பவை அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. வரவிருக்கும் எபிசோட்கள், இந்த கதையை இன்னும் எந்த அளவுக்கு தீவிரமாக கொண்டு செல்லப்போகின்றன என்பதே தற்போது அனைவரின் கவனமாக உள்ளது.

    இதையும் படிங்க: 'ஜனநாயகன்' படத்துக்காவது வாயை திறங்க விஜய்.. ப்ளீஸ்..! நக்கல் செய்த நடிகர் கருணாஸ்..!

    மேலும் படிங்க
    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ்நாடு
    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    மஞ்சள் நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் ப்ரியா பவானி சங்கர்.!! வைரலாகும் அழகிய லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    மஞ்சள் நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் ப்ரியா பவானி சங்கர்.!! வைரலாகும் அழகிய லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா
    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    தமிழ்நாடு
    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    ‘ஹார்ட் பீட்’ 3-வது சீசனில் கலக்கும் சுபிக்ஷா..!! திடீரென வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    ‘ஹார்ட் பீட்’ 3-வது சீசனில் கலக்கும் சுபிக்ஷா..!! திடீரென வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா

    செய்திகள்

    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ்நாடு
    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    தமிழ்நாடு
    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    எலுமிச்சை விலை தாறுமாறாக உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி! கிலோ ரூ.300-ஐ தொட்டது!

    எலுமிச்சை விலை தாறுமாறாக உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி! கிலோ ரூ.300-ஐ தொட்டது!

    தமிழ்நாடு
    பரந்தூர் விமான நிலைய இடத்தில் சிப்காட்? விவசாய நிலங்களுக்கு இனி என்ன ஆகும்? எழும் கேள்விகள்!!

    பரந்தூர் விமான நிலைய இடத்தில் சிப்காட்? விவசாய நிலங்களுக்கு இனி என்ன ஆகும்? எழும் கேள்விகள்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share