• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    எப்பா விஜய்.. எங்க போனீங்க.. இங்க பத்திகிட்டு கிடக்கு..! நேரடியாக தாக்கி பேசிய நடிகை கஸ்தூரி..!

    நடிகை கஸ்தூரி, விஜயை நேரடியாக தாக்கி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Bala Wed, 24 Dec 2025 11:52:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-thiruparankundram-issue-why-did-vijay-not-comment-actress-kasthuri-questions-tamilcinema

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் தொடர்பான விவகாரம், கடந்த சில நாட்களாக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பா.ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாசார பிரிவு செயலாளரும், நடிகையுமான கஸ்தூரி நேரில் வந்து தன் கருத்துகளை வெளிப்படுத்தியது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்துள்ள விவாதங்கள், நீதிமன்ற உத்தரவு, மத நம்பிக்கைகள் மற்றும் அரசியல் தலைவர்களின் கருத்துகள் என பல கோணங்களில் இந்த விவகாரம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பகல் 11 மணியளவில் நடிகை கஸ்தூரி மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்தார். கோவிலுக்கு வந்த அவர், முதலில் கோவிலுக்குள் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பழனியாண்டவர் கோவிலுக்கும் சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

    அவரது வருகை குறித்து அறிந்திருந்த பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கோவில் வளாகத்தில் திரண்டதால், அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட உள்ளூர் மக்களை நடிகை கஸ்தூரி சந்தித்து பேசினார்.

    இதையும் படிங்க: ரசிகர்கள் மனசை அப்படியே தாக்கணும்.. அப்படிப்பட்ட படத்துக்காக எதையும் செய்ய தயார் - நடிகை தீவ்ரா ஹரன்..!

    actress kasthuri

    அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாகவும் அவர் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களை சந்தித்த கஸ்தூரி, ஒவ்வொருவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வு அங்கிருந்த மக்களிடையே உணர்ச்சிப் பூர்வமான சூழலை உருவாக்கியது. பின்னர், நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்து நீண்ட நேரம் தனது கருத்துகளை வெளிப்படுத்தினார். அவர் பேசும்போது, திருப்பரங்குன்றம் விவகாரம் வெறும் ஒரு அரசியல் பிரச்சினை அல்ல என்றும், இது இந்துக்களின் ஆழ்ந்த நம்பிக்கையுடன் தொடர்புடைய விஷயம் என்றும் வலியுறுத்தினார். அவர் கூறுகையில், “தீபம் ஏற்ற வேண்டும் என்று ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அந்த தியாகத்தைக்கூட கொச்சையாகப் பிரசாரம் செய்கிறார்கள். இது மிகவும் வேதனையான விஷயம்” என தெரிவித்தார்.

    மேலும், தீபத்தூண் தொடர்பாக சில அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளையும் அவர் கடுமையாக விமர்சித்தார். அதன்படி “தீபத்தூணை சர்வே கல் என்று கனிமொழி கூறியுள்ளார். இது இந்துக்களின் நம்பிக்கையையும், மதுரை ஐகோர்ட் உத்தரவையும், பாரம்பரியத்தையும் அவமதிப்பதற்குச் சமம்” என்று அவர் கூறினார். அதே நேரத்தில், மத ஒற்றுமை குறித்து பேசும் கஸ்தூரி, “தர்காவுக்கு வந்து நான் வழிபட தயாராக இருக்கிறேன். அதுபோல எங்கள் தீபத்தூணுக்கு நீங்களும் வந்து ஒரு விளக்கேற்றுங்கள்” என சவால் விடும் வகையில் கருத்து தெரிவித்தார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்தும் நடிகை கஸ்தூரி தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். அதில் “திருமாவளவன் மீது எனக்கு முன்பு மிகுந்த மரியாதை இருந்தது. ஆனால் அவர் சேராத இடம் சேர்ந்து, மனசாட்சிக்கு விரோதமாக பேசுகிறார்” என்று கூறிய அவர், முருகன் பெயர் தொடர்பாக அவர் எழுப்பிய கேள்விகளையும் கடுமையாக விமர்சித்தார்.

    actress kasthuri

    மேலும் “முருகன் என்று பெயர் வைத்தவர்கள் இருக்கிறார்களா? கொண்டு வந்து காட்டுங்கள் என்று கேட்கிறாரே. என் மகனின் பெயர் கார்த்திகேயன். கர்நாடகாவில் எத்தனை பேருக்கு முருகன், முருகையா என்று பெயர் இருக்கிறது தெரியுமா? எத்தனை பேரை நான் வந்து காட்ட வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பினார். இதன் தொடர்ச்சியாக, “அடுத்ததாக குமரன் என்று பெயர் இருக்கிறதா என்று கேட்பார்களா? என் கணவர் பெயர் குமார். அடுத்தது அலகு குத்துவீர்களா, மொட்டை அடிப்பீர்களா என்று இப்படியே ஒவ்வொன்றாக கேட்பவர்களுக்கு நாம் பதில் சொல்ல முடியாது” என அவர் ஆவேசமாக பேசினார்.

    அத்துடன் அவர், “ஏன் என்றால் அவர்களுக்கு விஷயமும் தெரியவில்லை, நம்பிக்கையும் இல்லை” என்று குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் திரையுலகத்தைச் சேர்ந்த சிலர் மௌனம் காத்து வருவது குறித்தும் கஸ்தூரி கருத்து தெரிவித்தார். குறிப்பாக நடிகர் விஜயை குறிப்பிட்டு, “நண்பர் விஜய் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றார். அதில் தவறு இல்லை. ஆனால் கார்த்திகை தீபத்துக்கு ஒரு வாழ்த்து சொல்லியிருக்கலாம்” என கூறினார். அதேபோல், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்தும் அவர் பேசினார். “இப்போது எம்.ஜி.ஆர். பெயரை சொல்லி அரசியல் செய்கிறார். முதல்வராக வேண்டும் என்ற கனவில் இருக்கிறார். அப்படி இருக்கும்போது, திருப்பரங்குன்றம் போன்ற ஒரு முக்கியமான விவகாரத்தில் அவர் கருத்து சொல்லாமல் இருப்பது தவறு” என கஸ்தூரி விமர்சித்தார்.

    இந்த சூழலில் நடிகை கஸ்தூரியின் இந்த கருத்துகள், அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் அவரது பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா ஆதரவாளர்கள் கருத்துகளை பகிர்ந்து வரும் நிலையில், மறுபுறம் அவரது பேச்சு அரசியல் நோக்கத்துடன் இருப்பதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர். மொத்தத்தில், திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தற்போது ஒரு மத நம்பிக்கை – அரசியல் – நீதிமன்ற உத்தரவு என்ற மூன்று முக்கிய கோணங்களில் சிக்கலாகி உள்ளதாக பார்க்கப்படுகிறது.

    actress kasthuri

    இந்த சூழலில், நடிகை கஸ்தூரியின் நேரடி வருகை, கோவில் தரிசனம், போராட்டக்காரர்களை சந்தித்த நிகழ்வு மற்றும் அவர் வெளிப்படுத்திய கடுமையான கருத்துகள், இந்த விவகாரத்தை மேலும் தேசிய அளவிலான கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். வரும் நாட்களில் இந்த விவகாரம் எந்த திசையில் செல்லும் என்பது குறித்து அனைவரும் உற்றுநோக்கி வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஹிட் கொடுத்த காந்தாரா..! நன்றி சொல்ல குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்ற நடிகர் ரிஷப் ஷெட்டி..!

    மேலும் படிங்க
    50 நாட்கள் பொறுமையாக இருங்க... எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக-விற்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    50 நாட்கள் பொறுமையாக இருங்க... எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக-விற்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    தமிழ்நாடு
    மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும்...! ஈரானை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

    மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும்...! ஈரானை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

    உலகம்
    விவசாய வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்க கூடாது... சௌமியா அன்புமணி கோரிக்கை!

    விவசாய வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்க கூடாது... சௌமியா அன்புமணி கோரிக்கை!

    தமிழ்நாடு
    மதுரையில் 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சூளுரை!

    மதுரையில் 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சூளுரை!

    அரசியல்
    22 மாநிலங்களில் ஏப்ரல் முதல்

    22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் 'எஸ்.ஐ.ஆர்' பணிகள் தொடக்கம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா
    கோவையில் சந்திரயான் மாதிரி சிலை திறப்பு...! இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்!

    கோவையில் சந்திரயான் மாதிரி சிலை திறப்பு...! இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    50 நாட்கள் பொறுமையாக இருங்க... எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக-விற்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    50 நாட்கள் பொறுமையாக இருங்க... எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக-விற்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    தமிழ்நாடு
    மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும்...! ஈரானை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

    மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும்...! ஈரானை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

    உலகம்
    விவசாய வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்க கூடாது... சௌமியா அன்புமணி கோரிக்கை!

    விவசாய வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்க கூடாது... சௌமியா அன்புமணி கோரிக்கை!

    தமிழ்நாடு
    மதுரையில் 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சூளுரை!

    மதுரையில் 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சூளுரை!

    அரசியல்
    22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் 'எஸ்.ஐ.ஆர்' பணிகள் தொடக்கம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் 'எஸ்.ஐ.ஆர்' பணிகள் தொடக்கம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா
    கோவையில் சந்திரயான் மாதிரி சிலை திறப்பு...! இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்!

    கோவையில் சந்திரயான் மாதிரி சிலை திறப்பு...! இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share