• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சசிகுமாரின் விசாரணை சுவாரஸ்யம் தந்ததா..!! ‘முடக்கத்தான் மணி’ மர்மத்தின் பின்னணி என்ன.. வதந்தி சீசன் 2 முழு விமர்சனம்..!

    வதந்தி சீசன் 2 சசிகுமாரின் விசாரணை சுவாரஸ்யம் தந்ததா என்ற முழு விமர்சனம் கிடைத்துள்ளது.
    Author By Bala Sat, 15 Aug 2026 12:13:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-vadhandhi-mystery-of-mani-web-series-review-tamilcinema

    தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், ஓடிடி தளங்களிலும் கிரைம், இன்வெஸ்டிகேஷன், மிஸ்டரி கதைகளுக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஒரு கொலை, அதைச் சுற்றி இருக்கும் மர்மம், திடீரென கிடைக்கும் ஒரு ஆதாரம், குற்றவாளி என ஒருவர் கைது செய்யப்படுவது, ஆனால் உண்மையான குற்றவாளி யார் என்ற கேள்வி தொடர்ந்து நீடிப்பது என நகரும் கதைகள் ரசிகர்களின் ஆர்வத்தை எளிதில் தூண்டிவிடும். அந்த வகையில், முதல் சீசனில் கவனம் பெற்ற ‘வதந்தி: தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ தொடரைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

    இந்த இரண்டாவது சீசனில் சசிகுமார், யஷ்வந்த், அனகா, விவேக் பிரசன்னா, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் சீசனைப் போலவே மர்மம், கொலை, காவல் விசாரணை, குற்றத்தின் பின்னால் இருக்கும் உண்மை என கதை நகர்கிறது. ஆனால் முதல் சீசன் ஏற்படுத்திய தாக்கத்தை இரண்டாவது சீசன் முழுமையாக ஏற்படுத்தியிருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் தேடினால், பல நல்ல அம்சங்களுடன் சில பெரிய குறைகளும் இருக்கும் தொடராகவே இது அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் 8 வழிச்சாலை அமைப்பதற்காக நடைபெறும் பூமி பூஜையின்போது, தோண்டப்பட்ட குழியில் இருந்து திடீரென ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்படுகிறது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டதாக கருதப்படும் அந்த எலும்புக்கூடு யாருடையது என்ற கேள்வி எழுகிறது.

    இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு காவல் அதிகாரியான SI மூஸா ராசாவிடம் வருகிறது. இந்த கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். முதலில் கிடைக்கும் ஆதாரங்களை வைத்து வழக்கை விசாரிக்கத் தொடங்கும் மூஸா ராசா, ஒவ்வொரு கட்டமாக தகவல்களை சேகரிக்கிறார். விசாரணை செல்லச் செல்ல, இந்தக் கொலைக்கு பின்னால் ‘முடக்கத்தான் மணி’ என்ற ஜல்லிக்கட்டு வீரர் இருப்பதாக தெரியவருகிறது. இறுதியில் மணி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனையும் கிடைக்கிறது. ஆனால் இங்குதான் கதையின் முக்கியமான திருப்பம் தொடங்குகிறது. வழக்கு முடிந்துவிட்டதாக தோன்றினாலும், மூஸா ராசாவின் மனதில் மட்டும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. முடக்கத்தான் மணி உண்மையில் கொலை செய்தாரா? அல்லது வேறு யாரோ செய்த குற்றத்திற்காக அவர் பலியாகிவிட்டாரா?

    இதையும் படிங்க: சீரியல் நடிகையின் உழைப்புக்கு கிடைத்த பலன்..!! அக்ஷயா போபையாவின் ‘குட் நியூஸ்’ வைரல்..!

    vadhandhi-mystery-of-mani

    இந்த சந்தேகத்திற்கான பதிலைத் தேடும் மூஸா ராசாவின் பயணமே ‘வதந்தி சீசன் 2’வின் மையக்கதை. இந்த தொடரின் மிகப்பெரிய பலம் என்றால் அது சசிகுமாரின் நடிப்புதான். வழக்கமான சசிகுமார் தோற்றத்தில் இருந்து விலகி, தாடியுடன் இஸ்லாமிய காவல் அதிகாரியாக மூஸா ராசா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பக்கம் காவல் அதிகாரியாக வழக்கின் உண்மையை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு. இன்னொரு பக்கம், பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பமாக இருக்கும் மனைவி அபர்ணா தாஸை கவனித்துக் கொள்ள முடியாமல் தவிக்கும் கணவன். இந்த இரண்டு விதமான மனநிலைகளையும் ஒரே கதாபாத்திரத்தில் சசிகுமார் நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.

    காவல் நிலையத்தில் வழக்கை விசாரிக்கும் காட்சிகளில் இருக்கும் சீரியஸான உடல்மொழியும், வீட்டில் மனைவியைப் பற்றிய கவலையுடன் இருக்கும் காட்சிகளில் வெளிப்படும் மென்மையான அணுகுமுறையும் கதாபாத்திரத்தை நம்பும்படி செய்கின்றன. குறிப்பாக, ஒரு வழக்கு முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக கருதப்பட்டாலும், தன்னுடைய மனதில் மட்டும் அது முடியவில்லை என்ற உணர்வுடன் சசிகுமார் தொடர்ந்து ஆதாரங்களை தேடும் விதம் கதையை முன்னோக்கி நகர்த்துகிறது. இந்த தொடரின் கதையின் மையத்தில் இருக்கும் முடக்கத்தான் மணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள யஷ்வந்த், அறிமுக நடிகராக கவனம் ஈர்க்கிறார்.

    முதலில் அவர் ஒரு ஜல்லிக்கட்டு வீரராகவும், கொலை வழக்கில் சிக்கிய நபராகவும் காட்டப்படுகிறார். சிறையில் இருக்கும் மணியிடம் விசாரணை நடத்தும்போது, அவர் தனது வாழ்க்கையைப் பற்றி சில உண்மைகளை கூறுகிறார். அதே நேரத்தில், சில விஷயங்களை வேண்டுமென்றே மறைத்து பேசுவதும் கதாபாத்திரத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. யஷ்வந்தின் நடிப்பில் குறிப்பிடத்தக்கது, தனது கதாபாத்திரத்தின் உண்மையான முகம் வெளிப்படும் தருணங்களில் அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள். குறிப்பாக, தான் மறைத்து வைத்திருக்கும் உண்மை வெளியே வந்த பிறகு, அதை சசிகுமார் உலகத்துக்கு சொல்லிவிடக் கூடாது என்ற பதற்றத்தை அவர் வெளிப்படுத்தும் விதம் பாராட்டுக்குரியது.

    ஒரு அறிமுக நடிகராக இப்படியொரு கனமான கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு நடித்திருப்பது யஷ்வந்த்துக்கு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. எஸ்.பி. ராத்திகா கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனகாவும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார். கதையின் முதல் காட்சியிலிருந்து இறுதி வரை அவருக்கு கிடைத்த கதாபாத்திரத்தை திறம்பட கையாண்டிருக்கிறார். காவல் விசாரணையின் முக்கியமான பகுதிகளில் அவரது கதாபாத்திரம் வருவதால், மூஸா ராசாவின் விசாரணைப் பயணத்துக்கும் அது கூடுதல் வலு சேர்க்கிறது. அனகாவின் நடிப்பு கதையில் தனியாக கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு அமைந்துள்ளது. அதேபோல், அபர்ணா தாஸுக்கும் முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. கர்ப்பமாக இருக்கும் நிலையில், கணவரின் வேலை எப்படிப்பட்டது, அவர் எந்த மாதிரியான ஆபத்துகளை எதிர்கொள்கிறார், அவருக்கு தன்னால் எப்படி உதவ முடியும் என்ற கவலையை மனதில் சுமந்து கொண்டிருக்கும் பெண்ணாக நடித்துள்ளார்.

    vadhandhi-mystery-of-mani

    கணவரின் வேலை காரணமாக ஏற்படும் பயம் மற்றும் குடும்பத்தின் மீதான அக்கறை ஆகியவற்றை அபர்ணா தாஸ் இயல்பாக வெளிப்படுத்துகிறார். மற்ற நடிகர்கள், நடிகைகள் என தொடரில் இடம்பெற்றுள்ள அனைவரின் பங்களிப்பும் ஒட்டுமொத்தமாக கதைக்கு பலம் சேர்க்கிறது. ‘வதந்தி 2’வின் மிகப்பெரிய குறை, அதன் வேகம். தொடரின் ஆரம்ப எபிசோட்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. எலும்புக்கூடு எப்படி கிடைத்தது? அது யாருடையது? முடக்கத்தான் மணி உண்மையில் கொலை செய்தாரா? காவல்துறையின் விசாரணையில் என்னென்ன ஆதாரங்கள் கிடைக்கின்றன? என்ற கேள்விகள் அடுத்தடுத்த காட்சிகளை பார்க்க வைக்கின்றன.

    ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு அந்த விறுவிறுப்பு குறைந்து விடுகிறது. குறிப்பாக, தொடரின் நீளத்தை அதிகரிப்பதற்காகவே சீரியல் கில்லர் என்ற ஒரு கதைக்களம் நடுவில் கொண்டு வரப்பட்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதனால் சுமார் நான்கு எபிசோட்கள் பிரதான கதையிலிருந்து விலகி தேவையில்லாமல் சுற்றுவது போல் தெரிகிறது. ஒரு கட்டத்தில், “இந்தக் கதைக்கும் முடக்கத்தான் மணி வழக்குக்கும் என்ன தொடர்பு?” என்ற கேள்வி பார்வையாளர்களுக்கே எழுகிறது. அந்தப் பகுதிகள் சுவாரஸ்யத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், தொடரின் வேகத்தையும் பாதிக்கின்றன. முதலில் இருந்த ஆர்வம் அந்த இடத்தில் கணிசமாக குறைந்து விடுகிறது. விசாரணையின் போது ஏற்படும் மனிதத் தவறுகள் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதை சேத்தன் கதாபாத்திரம் தொடர்பான பகுதிகள் எடுத்துக்காட்டுகின்றன.

    ஒரு வழக்கில் அதிகாரிகள் சேகரிக்கும் ஆதாரங்கள், அவர்கள் எடுக்கும் முடிவுகள், அவற்றின் அடிப்படையில் உருவாகும் விசாரணை முடிவுகள் என அனைத்திலும் மனிதத் தவறுகளுக்கான வாய்ப்பு இருப்பதை இந்த கதை சுட்டிக்காட்டுகிறது. குற்ற விசாரணையில் ஒரு சிறிய தவறு கூட ஒரு நிரபராதியை குற்றவாளியாக்கும் அளவுக்கு சென்றுவிடலாம் என்ற கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தொடரின் இறுதியில் வரும் திருப்பம் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த ட்விஸ்ட்டுக்கான காரணம் இன்னும் வலுவாக அமைந்திருக்கலாம் என்ற உணர்வு ஏற்படுகிறது. கதையின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட மர்மத்துக்கு முடிவு கிடைத்தாலும், அந்த முடிவு பார்வையாளர்களை முழுமையாக திருப்திப்படுத்துகிறதா என்றால், அது தனிப்பட்ட பார்வையைப் பொறுத்தது.

    கிளைமாக்ஸில் இருக்கும் திருப்பம் வேலை செய்கிறது. ஆனால் அதற்கு முன்பு கதையை நீண்ட நேரம் சுற்றி வந்திருப்பதால், அந்த முடிவை அடையும் நேரத்தில் ரசிகர்களின் பொறுமை சற்று சோதிக்கப்படுகிறது. மொத்தத்தில், ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ ஒரு முழுமையான குறையற்ற இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் என்று சொல்ல முடியாது. முதல் சீசன் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்றாலும், சசிகுமாரின் நடிப்பு, யஷ்வந்த்தின் அறிமுகம், அனகா மற்றும் அபர்ணா தாஸின் பங்களிப்பு, சில விசாரணைக் காட்சிகள் மற்றும் இறுதியில் வரும் திருப்பம் ஆகியவை தொடரை பார்க்க வைக்கின்றன. அதேசமயம், தேவையில்லாமல் நீட்டிக்கப்பட்டதாகத் தோன்றும் சீரியல் கில்லர் கதை, நடுப்பகுதியில் ஏற்படும் வேகத்தடை, சுவாரஸ்யம் குறையும் எபிசோட்கள் ஆகியவை தொடரின் மிகப்பெரிய பலவீனங்கள்.

    vadhandhi-mystery-of-mani

    முதல் சீசனைப் போல ஒவ்வொரு எபிசோடும் அடுத்தது என்ன என்ற ஆர்வத்தை உருவாக்கவில்லை என்றாலும், மூஸா ராசா மற்றும் முடக்கத்தான் மணி கதாபாத்திரங்களுக்காகவும், இறுதியில் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ளவும் ‘வதந்தி சீசன் 2’வை ஒருமுறை பார்க்கலாம்.

    இதையும் படிங்க: சினிமா, அரசியல், மகள் திருமணம்... அடுத்தது என்ன..!! குழப்பத்தில் இருக்கும் நடிகை குஷ்புவுக்கு நல்வழி காட்டிய சேனல்..!

    மேலும் படிங்க
    அருணாச்சலில் கோர வெள்ளம்! நிலச்சரிவு! ராணுவ வீரர்கள் 5 பேர் மாயம்! மீட்புப் பணி தீவிரம்!

    அருணாச்சலில் கோர வெள்ளம்! நிலச்சரிவு! ராணுவ வீரர்கள் 5 பேர் மாயம்! மீட்புப் பணி தீவிரம்!

    இந்தியா
    முதல்வருக்கு நன்றி… சாலைக்கு விஜய் பெயர்..! ஏகனாபுரம் கிராமசபையில் நடந்தது என்ன..?

    முதல்வருக்கு நன்றி… சாலைக்கு விஜய் பெயர்..! ஏகனாபுரம் கிராமசபையில் நடந்தது என்ன..?

    தமிழ்நாடு
    “கடைசி வரிசை” சர்ச்சை! சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த ராகுல் காந்தி, கார்கே!

    “கடைசி வரிசை” சர்ச்சை! சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த ராகுல் காந்தி, கார்கே!

    அரசியல்
    24 மணி நேரத்தில் அதிரடி முடிவு.. என்ரிகாவின் 11 மதுபான வகைகளுக்கான தடை நீக்கம்!!

    24 மணி நேரத்தில் அதிரடி முடிவு.. என்ரிகாவின் 11 மதுபான வகைகளுக்கான தடை நீக்கம்!!

    தமிழ்நாடு
    சென்னையில் நாளை அண்ணாமலை தலைமையில் பிரமாண்ட பேரணி! வீ த லீடர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    சென்னையில் நாளை அண்ணாமலை தலைமையில் பிரமாண்ட பேரணி! வீ த லீடர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    அரசியல்
    ஹார்முஸ் நீரிணை இனி அமெரிக்காவுக்கு சொந்தம்! ஈரானை வீழ்த்தியதும் அடுத்த அதிரடி! ட்ரம்ப் சூசகம்!

    ஹார்முஸ் நீரிணை இனி அமெரிக்காவுக்கு சொந்தம்! ஈரானை வீழ்த்தியதும் அடுத்த அதிரடி! ட்ரம்ப் சூசகம்!

    உலகம்

    செய்திகள்

    அருணாச்சலில் கோர வெள்ளம்! நிலச்சரிவு! ராணுவ வீரர்கள் 5 பேர் மாயம்! மீட்புப் பணி தீவிரம்!

    அருணாச்சலில் கோர வெள்ளம்! நிலச்சரிவு! ராணுவ வீரர்கள் 5 பேர் மாயம்! மீட்புப் பணி தீவிரம்!

    இந்தியா
    முதல்வருக்கு நன்றி… சாலைக்கு விஜய் பெயர்..! ஏகனாபுரம் கிராமசபையில் நடந்தது என்ன..?

    முதல்வருக்கு நன்றி… சாலைக்கு விஜய் பெயர்..! ஏகனாபுரம் கிராமசபையில் நடந்தது என்ன..?

    தமிழ்நாடு
    “கடைசி வரிசை” சர்ச்சை! சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த ராகுல் காந்தி, கார்கே!

    “கடைசி வரிசை” சர்ச்சை! சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த ராகுல் காந்தி, கார்கே!

    அரசியல்
    24 மணி நேரத்தில் அதிரடி முடிவு.. என்ரிகாவின் 11 மதுபான வகைகளுக்கான தடை நீக்கம்!!

    24 மணி நேரத்தில் அதிரடி முடிவு.. என்ரிகாவின் 11 மதுபான வகைகளுக்கான தடை நீக்கம்!!

    தமிழ்நாடு
    சென்னையில் நாளை அண்ணாமலை தலைமையில் பிரமாண்ட பேரணி! வீ த லீடர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    சென்னையில் நாளை அண்ணாமலை தலைமையில் பிரமாண்ட பேரணி! வீ த லீடர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    அரசியல்
    ஹார்முஸ் நீரிணை இனி அமெரிக்காவுக்கு சொந்தம்! ஈரானை வீழ்த்தியதும் அடுத்த அதிரடி! ட்ரம்ப் சூசகம்!

    ஹார்முஸ் நீரிணை இனி அமெரிக்காவுக்கு சொந்தம்! ஈரானை வீழ்த்தியதும் அடுத்த அதிரடி! ட்ரம்ப் சூசகம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share