×
 

100வது நாளை கடந்து வெற்றி கொண்டாட்டத்தில் "டிராகன்"..! தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கொடுத்த மாஸ் கிப்ட்..! 

படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி படக்குழுவினருக்கு நினைவு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.

கோமாளி மற்றும் லவ் டுடே படம் பிரதீப் ரங்கநாதனுக்கு டிராகன் படம் பெரிய புகழையே தேடி தந்துள்ளது. இந்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமான AGS என்டேர்டைன்மெண்ட் கலப்பாத்திஸ் அகோரம் தயாரிப்பில் அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில் விஜே சித்து, ஹர்ஷத்கான் ஆகியோர் இணைப்பில் உருவாகி கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்த திரைப்படம் தான் "டிராகன்". 

பிரதீப் ரங்கநாதனை போல இப்படம் அஷ்வின் மாரிமுத்துவுக்கும் மிகவும் பொக்கிஷமான படம் எனலாம். ஏனெனில் "ஓ மாய் கடவுளே" படத்திற்கு கிடைத்த வரவேற்பை காட்டிலும் ஒரு மடங்கு அதிகமாகியுள்ளது "டிராகன்" படத்தின் இயக்கம். படம் பார்த்தவர்கள் அனைவரும் அஷ்வினை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். சினிமா பிரபலங்கள் தொடங்கி இயக்குனர் சங்கர் வரை அனைவரது பாராட்டையும் இப்படம் பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து, டிராகன் படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.

இதையும் படிங்க: நடிகர் சூர்யாவுடன் ஹனிமூன் பிசியில் ஜோதிகா..! இளமையை கழிக்க சென்றுள்ள இடத்தை பாருங்க..!

அப்போது, பேசிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெலுங்கில் பிரபல நடிகரான மகேஷ் பாபுவிற்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். என்னவெனில் தான் இயக்கிய "ஓ மை கடவுளே' படம் வெளியான போது அப்படத்தை பார்த்த நடிகர் மகேஷ்பாபு அதனை பாராட்டி ஒரு ட்வீட் போட்டார். அதனை பார்த்த தெலுங்கு ரசிகர்கள் அனைவரும் படத்தை பார்த்து கொண்டாடினர். அதேபோல், 'டிராகன்' படத்தையும் அவர் பார்க்க வேண்டும், நிச்சயமாக இந்த படமும் அவருக்கு பிடிக்கும் என நம்புகிறேன்" என்று உணர்ச்சி பொங்க பேசினார்.

கல்லூரி வாழ்க்கையை மையமாக கொண்ட இந்த திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்தத் திரைப்படத்தின் கதைக்களம் என பார்த்தால்,  இன்ஜினியரிங் படிப்பில் நாட்டமில்லாமல் காலேஜில் கெத்தாக சுத்த நினைக்கும் பிரதீப் ரங்கநாதன் ஒரு சப்ஜெக்ட்டில் கூட பாஸ் ஆகாமல் கல்லூரியில் இருந்து வெளியேறுகிறார். பின்பு அவர் காதலித்த அனுபமா அவரை வேண்டாம் என உதறித் தள்ளிவிட்டு செல்ல, கெத்தாக இருப்பதெல்லாம் காலேஜ் வரைக்கும் தான் வாழ்க்கையில் சம்பாதிப்பதே கெத்து என உணர்ந்த பிரதிப் ரங்கநாதன், உடனடியாக தான் பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர வேண்டும் என நினைத்து ஒரு ஏஜென்சிக்கு செல்லுகிறார். அங்கு 10 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து போலியான டிகிரியை தயார் செய்து பெரிய கம்பெனியில் வேலையும் பெறுகிறார்.

பின்பு அங்கு வேலையை முழுமையாக கற்றுக்கொண்ட பிரதிப் ரங்கநாதன், அடுத்தடுத்ததாக பெரிய வீடு, கார் என செட்டில் ஆகிறார். பின்பு கே.எஸ்.ரவிக்குமாரின் மகளான கயாடு லோஹருக்கும் அவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அப்பொழுது பிரதீப் ரங்கநாதனின் கல்லூரி பிரின்சிபல் ஆன மிஷனுக்கு இவர் போலியாக ஆவணங்கள் தயார் செய்து பெரிய கம்பெனியில் வேலையில் இருப்பது தெரியவந்து, பிரதீப்பை நேராகவே சென்று பார்த்து மிரட்டுகிறார். தான் உண்மையை மேலாளரிடம் சொல்ல கூடாது என்றால் நீ ஒரு மாத காலம் கல்லூரியில் தங்கி இருந்து மீண்டும் அந்த டிகிரிகளை முடிக்க வேண்டும் என நிபந்தனை வைப்பார். அந்த நிபந்தனையை ஏற்று பிரதீப் காலேஜ்க்கு சென்று படித்து அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறுவார். 

கடைசி ஒரு பாடத்தில் அவர் எழுத வரும்பொழுது தன் காதலியை பார்க்க வந்ததால் தூக்க கலக்கத்தில் பரிட்சை சரியாக எழுதாமல் விட்டு விடுவார். இதனால் நன்றாக படித்து google கம்பெனிக்கு வேலைக்கு செல்ல வேண்டிய ஒரு மாணவன் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பதை பார்த்து மன வேதனை அடைந்த பிரதீப், திருமணத்தின் பொழுது தன்னுடைய அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டு ஜெயிலுக்கு சென்று மீண்டும் வருவார்.

அப்பொழுது தனது தந்தையிடம் உங்களுக்கு என் மீது கோபம் இருந்தால் அடித்து விடுங்கள் என்று சொல்லும் பொழுது, அவரது தந்தை உனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை தன்னால் ஒருவருடைய வாழ்க்கை போகக்கூடாது என நினைத்து அனைவரது முன்னிலையிலும் உண்மையை கூறினாய் அல்லவா அன்றே நீ என்னுடைய மகனாகி விட்டாய் என்று சொல்லும்போது தியேட்டரில் உள்ள அனைவரும் கண்கலங்கினர். 

இப்படியாக திரைப்படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து தற்பொழுது, ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததோடு மட்டுமல்லாமல் 100 வது நாளையும் கடந்து படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதனால் டிராகன் படத்தின் 100 வது நாள் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி கோலாகமாக  நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்பொழுது நடிகர் பிரதீப் ரங்கநாதன் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி விட்டார்.

இதனை தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில்,"டிராகன் மாதிரி அர்த்தமுள்ள, அழகான, கமர்ஷியல் திரைப்படம் எதிர்காலத்தில் வருவது மிகவும் கடினம். அப்படியான ஒரு படத்தைக் கொடுத்த இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கும்,நடிகர் பிரதீப்புக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

மேலும், அடுத்த தலைமுறை இயக்குநர்கள் அஸ்வத் மாரிமுத்து போலவும், பிரதீப் ரங்கநாதன் போலவும் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இங்கு நடிகர்கள் ராஜா அல்ல கதைதான் ராஜா. நல்ல கதைகளைச் சொன்னால், உலகமெங்கும் இருக்கும் தமிழ் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். இளம் இயக்குநர்களுக்கு கதை எழுதுவது என்பது ரொம்பவே முக்கியம்," என்றார்.

இதையும் படிங்க: தனது மகன்களுடன் இணைந்த நடிகர் ரவிமோகன்..! ஆத்திரத்தில் மனைவி ஆர்த்தி ரவி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share