• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோட்டை விட்ட தவெக... கொத்தி சென்ற திமுக... சாதித்த உளவுத்துறை..

    விஜய் தவெகவை ஆரம்பித்த நிலையில் அவர் கட்சி மீது பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தனது கட்சியை நோக்கி வர நினைத்த தவெகவினரை அரவணைக்காமல், புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமியிடம் ஒப்படைத்ததால் தவெகவில் இணைய முடியாமல் ஆளுங்கட்சியான திமுகவில் இணைந்துள்ளனர்.
    Author By Kathir Fri, 24 Jan 2025 16:33:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Setback of TVK party..Gained DMK... Rocking intelligence..

    திராவிட கட்சிகளால் எந்தப் பயனும் இல்லை என்று நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்து தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வருகிறார் சீமான். அவரது அனல் பறக்கும் பேச்சைக் கேட்டு அணிஅணியாக இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். தேர்தலில் யாருடனும் கூட்டு இல்லை என்று முடிவு எடுத்து தோல்வி கண்டாலும் தொடர்ந்து ஆறுக்கும் மேற்பட்ட தேர்தலில் சந்தித்து 8 சதவீத வாக்குகளை நாம் தமிழர் கட்சி வைத்துள்ளது.

    arivalaiyam

    நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் சீமானின் பேச்சுக்கு ஈர்க்கப்பட்டு இடதுசாரி கட்சிகள் போல் தொண்டர் கூட்டமாய் இணைந்துள்ளனர். நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்த கட்டத்தில் இருக்கின்ற தலைவர்கள் பலரும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வரும் நிலையில், திடீரென நாம் தமிழர் கட்சிக்குள் கட்சி நிர்வாகிகளை சீமான் மதிப்பதில்லை அடுத்த கட்ட தலைவர்களை வளர விடாமல் பார்த்துக் கொள்கிறார், ஒரு சிலர் மட்டுமே வளர்கின்றனர்.

    இதையும் படிங்க: ஆளுநர் விருந்து திமுக புறக்கணிக்குமா? அரசு சார்பில் கலந்துக்கொள்வார்களா?

    சீமான் நிர்வாகிகளின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதில்லை, மதிக்க மாட்டேங்கிறார், ஆண்டுக்கணக்கில் உழைத்தாலும் அரசியலில் மேன்மையில்லை என நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்த நிலையில் மாற்றாக வந்த விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் மிகவும் மகிழ்ந்து விஜய் கட்சியில் இணையலாம் என்று முடிவெடுத்திருந்தனர். விஜய் தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்ததும் அவருடைய பேச்சும், விஜய் கட்சியில் அனைவருமே புதியவர்கள் என்பதாலும் நாம் தமிழர் கட்சியில் திமுகவுக்கு எதிராக, பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்த அனுபவம் மிக்கவர்கள் விஜய் கட்சியில் இணைவதன் மூலம் தனக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்கும். தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளாக நாம் உருவாக்க முடியும் என்கின்ற எண்ணத்தில் தவெகவை அணுகினர்.

    arivalaiyam

    ஆனால் தவெக மாநாடு நடத்தி முடித்தவுடன் விஜய் புஸ்ஸி ஆனந்திடமும், ஜான் ஆரோக்கியசாமியிடமும் கட்சியை ஒப்படைத்து விட்டு தனது வேலையை பார்க்க சென்று விட்டார். ஜான் ஆரோக்கிய சாமியும் புஸ்ஸி ஆனந்தும் அடுத்த கட்டமாக கட்சியை கொண்டு செல்வதில் எவ்வித அக்கறை இல்லாமல் மன்றம் நடத்துவது போல் கட்சியை நடத்திக் கொண்டு கட்சிக்கான நிர்வாகிகளை நியமிப்பதில் கூட எவ்வித செயல்பாடும் இன்றி ஒருவருக்கொருவர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டது ஆடியோவாக வெடித்து வெளிவந்தது. 

    arivalaiyam

    நிர்வாகிகள் நியமனத்தில் தனக்கு வேண்டியவர்களை நியமிக்கிறார், ஆதாயம் உள்ளவர்களுக்கு பதவி தரப்படுகிறது, கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான எந்தவித முயற்சிகளும் புஸ்ஸி ஆனந்த் ஈடுபடவில்லை, கட்சி பொறுப்புகளுக்கு நியமனத்திற்கு பணம் வசூலிக்கப்படுகிறது என்ற பகிரங்க குற்றச்சாட்டு எல்லாம் புஸ்ஸி மீதும் ஜான் ஆரோக்கிய சாமி மீதும் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை சார்ந்த முக்கிய பெண் பிரமுகரும் இன்னொரு பிரமுகரும் விஜயை சந்தித்து தவெகவில் இணைய பேசியது, ஜான் ஆரோக்கிய சாமி மூலம் நாம் தமிழர் கட்சி தலைமைக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது என்றும் இதனால் வருத்தம் அடைந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    arivalaiyam

    இந்நிலையில் இதுபற்றி அறிந்த விஜய் அவர்களை பொறுமையாக இருக்கச் சொல்லுங்கள் விரைவில் நல்ல முடிவு எடுக்கிறேன் என்று தெரிவித்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இது போன்று நாம் தமிழர் கட்சி திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளிலிருந்து தவெக-விற்கு வருவதற்காக முயற்சி எடுப்பவர்களை உள்ளே விடாமல், கண்டுகொள்ளாமல் எனக்கென்ன என்று  செயல்படும் புஸ்ஸி, ஜான் செயல்பாடுகளால் விரக்தி அடைந்த மாற்று கட்சியினர் குறித்த தகவல்களை எடுத்த உளவுத்துறை மூலம் கட்சி தலைமை உத்தரவின் மூலம் திமுகவினர் கொக்கி போட்டு தூக்கி உள்ளனர்.

    முதல் கட்டமாக நாம் தமிழர் கட்சியில் இருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை திமுக பக்கம் கொண்டு வருவதற்கான அசைன்மென்ட் ராஜீவ் காந்தி வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அதை வெற்றிகரமாக செயலாற்றி 6 மாவட்ட செயலாளர்கள், பல்வேறு பொறுப்பில் உள்ள நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட 3000 பேரை திமுகவில் இணைப்பதற்கான வேலையை கச்சிதமாக செய்து முடித்தார். இதை அடுத்து முதல்வரே நேரில் அவர்களை வரவேற்று கட்சிக்குள் இணைக்கும்  நிகழ்வு இன்று அண்ணா அறிவாலத்தில் நடந்தது.

    arivalaiyam

    இது பற்றி கருத்து தெரிவித்த தவெக நிர்வாகி ஒருவர் ”இவர்கள் எல்லோரும் தவெகவில் இணைய வேண்டியவர்கள். ஆனால் இங்குள்ள தலைவர்களுடைய சுயநலத்தால், கோஷ்டிமோதலால், மற்றவர்கள் நம் கட்சிக்குள் வந்துவிடக்கூடாது என்கிற எண்ணத்தினால் இதையெல்லாம் விஜய் கண்காணிக்காததால்  இன்று தவெகவில் இணைய வேண்டியவர்கள் திமுகவிற்குள் ஐக்கியமாகி இருக்கிறார்கள்” என்று வருத்தத்துடன் தெரிவித்தனர். ”தவெக நோக்கி வருபவர்களுக்கு எவ்வித சிக்னலையும் கொடுக்காமல், அவர்கள் குறித்த தகவலையும் அந்தந்த கட்சியின் தலைமைக்கு சொல்லும் அளவிற்கு தவெக தலைமை நிலைப்பாடு இருந்ததால் தவெக பக்கம் போவது சிக்கல் என்கிற கருத்தால் பலரும் ஆளுங்கட்சியின் பக்கம் ஒதுங்கி இருக்கின்றனர்” என்றும் வருத்தத்தை பகிர்ந்தனர்.

    இதுகுறித்து பேசிய மற்றொரு தவெக நிர்வாகி ஒருவர், “இந்த விவகாரத்தில் தவெக கோட்டை விட்டது என்றே சொல்லலாம். இதுகுறித்து தலைவர் விஜய் சீரியசாக விசாரிக்கணும், நாங்கள்  கோட்டை விட்டவர்களை திமுக கொத்திச் சென்றுவிட்டது என்று சொல்லலாம், எம்ஜிஆர் போல் கட்சி நடத்துவேன் என்று சொல்லும் தலைவர் விஜய், எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தவுடன் அணி அணியாய் கட்சிக்குள் இணைந்த மாற்று கட்சியினராய் வரவேற்று அதிமுகவை மேலும் பலமாக ஆக்கி அன்றைய ஆளுங்கட்சி திமுகவிற்கு எதிராக அரசியல் நடத்தி 77 இல் ஆட்சியும் பிடித்தார். 

    arivalaiyam

    ஆனால் கட்சி ஆரம்பித்து மூன்று மாதம் முடிந்த நிலையிலும் கட்சிக்குள் நிர்வாகிகளையும் போட முடியாமல், அரசியலுக்கு சம்பந்தம் இல்லாதவர்களை அரசியல் செய்ய விட்டு, கட்சிக்கு வருபவர்களையும் மாற்று கட்சிக்கு தலைமையில் உள்ளவர்களே வெளியில் அனுப்பும் வேலையையும் செய்துள்ளனர். இதனால் திமுக முந்திக்கொண்டது, தவெக கோட்டை விட்டது. இதெல்லாம் அரசியலில் முக்கியம், நாம் இப்பத்தான் நிர்வாகிகளை நியமிப்பது பற்றியே சிந்திக்கிறோம். கட்சித்தலைமைக்கு  இது தெரியாத வரை கட்சியை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்த முடியாது” என வருத்தத்துடன் அவர்கள் எண்ணத்தை பகிர்ந்து கொண்டனர். விஜய் சிந்திப்பாரா? செயல்படுவாரா? இனியும் இணைய வருபவர்களை என்ன செய்ய போகிறார்.

    இதையும் படிங்க: ஆளுநர் விருந்து திமுக புறக்கணிக்குமா? அரசு சார்பில் கலந்துக்கொள்வார்களா?

    மேலும் படிங்க
    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    இந்தியா
    அப்போ மழை; இப்போ தொழில்நுட்ப கோளாறு... கைவிடப்பட்ட பஞ்சாப் vs டெல்லி இடையேயான போட்டி!!

    அப்போ மழை; இப்போ தொழில்நுட்ப கோளாறு... கைவிடப்பட்ட பஞ்சாப் vs டெல்லி இடையேயான போட்டி!!

    கிரிக்கெட்
    பிறந்த பெண் குழந்தைக்கு தேசப்பக்தியால் சிந்தூரி பெயர்.. பீகார் தம்பதிக்கு குவியும் பாராட்டு

    பிறந்த பெண் குழந்தைக்கு தேசப்பக்தியால் சிந்தூரி பெயர்.. பீகார் தம்பதிக்கு குவியும் பாராட்டு

    இந்தியா
    அத்துமீறிய பாகிஸ்தான்! அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் அவசர ஆலோசனை...

    அத்துமீறிய பாகிஸ்தான்! அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் அவசர ஆலோசனை...

    இந்தியா
    எகிறும் பாக். ராணுவம்....போர் பதற்றம் கூடாது! வார்னிங் கொடுத்த அமெரிக்கா...

    எகிறும் பாக். ராணுவம்....போர் பதற்றம் கூடாது! வார்னிங் கொடுத்த அமெரிக்கா...

    இந்தியா
    குனிந்து கும்பிடு போட்டு ஆண்டவர் இபிஎஸ்..  அண்ணன் ஆட்சியை புகழ்ந்து தள்ளிய தங்கை..!

    குனிந்து கும்பிடு போட்டு ஆண்டவர் இபிஎஸ்.. அண்ணன் ஆட்சியை புகழ்ந்து தள்ளிய தங்கை..!

    அரசியல்

    செய்திகள்

    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    இந்தியா
    அப்போ மழை; இப்போ தொழில்நுட்ப கோளாறு... கைவிடப்பட்ட பஞ்சாப் vs டெல்லி இடையேயான போட்டி!!

    அப்போ மழை; இப்போ தொழில்நுட்ப கோளாறு... கைவிடப்பட்ட பஞ்சாப் vs டெல்லி இடையேயான போட்டி!!

    கிரிக்கெட்
    பிறந்த பெண் குழந்தைக்கு தேசப்பக்தியால் சிந்தூரி பெயர்.. பீகார் தம்பதிக்கு குவியும் பாராட்டு

    பிறந்த பெண் குழந்தைக்கு தேசப்பக்தியால் சிந்தூரி பெயர்.. பீகார் தம்பதிக்கு குவியும் பாராட்டு

    இந்தியா
    அத்துமீறிய பாகிஸ்தான்! அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் அவசர ஆலோசனை...

    அத்துமீறிய பாகிஸ்தான்! அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் அவசர ஆலோசனை...

    இந்தியா
    எகிறும் பாக். ராணுவம்....போர் பதற்றம் கூடாது! வார்னிங் கொடுத்த அமெரிக்கா...

    எகிறும் பாக். ராணுவம்....போர் பதற்றம் கூடாது! வார்னிங் கொடுத்த அமெரிக்கா...

    இந்தியா
    குனிந்து கும்பிடு போட்டு ஆண்டவர் இபிஎஸ்..  அண்ணன் ஆட்சியை புகழ்ந்து தள்ளிய தங்கை..!

    குனிந்து கும்பிடு போட்டு ஆண்டவர் இபிஎஸ்.. அண்ணன் ஆட்சியை புகழ்ந்து தள்ளிய தங்கை..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share