• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, December 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தெலங்கானாவில் அதிர்ச்சி! வன்கொடுமை செய்யப்பட்டு கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட 7 வயதுச் சிறுமி சடலம்!

    தெலங்கானாவில் 7 வயது சிறுமி கொடூரமாகப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 03 Dec 2025 18:50:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    7-Year-Old Girl Brutally Raped and Murdered in Telangana; Two, Including Relative, Arrested.

    தெலங்கானா மாநிலம் மஞ்சிரியால் மாவட்டம், தண்டேபள்ளி மண்டலம், நம்பாலா கிராமத்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமாகப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    சிறுமி ஷனிகாரபு மஹன்விதா (வயது 7) கடந்த சில நாட்களாகக் காணாமல் போயிருந்தார். இந்நிலையில், அவரது உடல் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது, மாவட்டம் முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சிறுமி மஹன்விதாவைக் கடந்த இரண்டு நாட்களாகக் காணாமல் பதறிய அவரது குடும்பத்தினர், தண்டேபள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்து தீவிரத் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். தேடுதலின்போது கிராமத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

    இதையும் படிங்க: கோவையில் நிகழ்ந்த கொடூரம்… இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை... காமக் வெறியர்களுக்கு போலீஸ் வலைவீச்சு..!

    உடல் கண்டெடுக்கப்பட்ட விதத்தை ஆராய்ந்த போலீசார், இது கொலையே என உறுதிசெய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குற்றவாளிகள் சிறுமியை மிகக் கொடூரமாகப் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்து, ஆதாரங்கள் கிடைக்காமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உடலுடன் பெரிய கல்லைக் கட்டி கிணற்றில் தூக்கிப் போட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    தகவல் கிடைத்ததும் மஞ்சிரியால் ஏ.சி.பி. பிரகாஷ், சி.ஐ. ரமணமூர்த்தி, தண்டேபள்ளி எஸ்.ஐ. தஹசீனுத்தீன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், சுற்றியுள்ள பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்தனர். க்ளூ குழு மற்றும் நாய்ப் பிரிவை வரவழைத்து ஆதாரங்களைச் சேகரித்தனர்.

    கிராமத்தைச் சேர்ந்த ஷனிகாரபு பாபு (52) மற்றும் உபாரபு சதீஷ் (40) ஆகியோரின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் எழுந்ததால், அவர்களை விசாரித்தபோது, தாங்களே குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்டனர். சிறுமிக்கு உறவில் பெரிய தந்தையான ஷனிகாரபு பாபுவும், மற்றொருவரான உபாரபு சதீஷும் இணைந்து இந்தக் கொடூரத்தைப் பாலியல் வன்புணர்வு செய்து, சிறுமியின் உயிரைப் பறித்தது சில மணி நேரங்களிலேயே தெரியவந்தது.

    திங்களன்று தண்டேபள்ளி போலீஸ் நிலையத்தில் குற்றவாளிகளை ஆஜர் படுத்திய மஞ்சிரியால் டி.சி.பி. எக்கடி பாஸ்கர் இது குறித்த விவரங்களைத் தெரிவித்தார். முதன்மைக் குற்றவாளியான ஷனிகாரபு பாபுவின் (52) மனைவி ஆறு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவரது இரண்டு குழந்தைகளும் தொலைவில் வசிக்கின்றனர். மற்றொரு குற்றவாளியான உபாரபு சதீஷ் (40) இரண்டு ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்றவர். இவர்கள் இருவரும் அடிக்கடி மது அருந்தி, செல்போனில் ஆபாச வீடியோக்களைப் பார்த்து ஊருக்குள் வெறித்தனமாகச் சுற்றித் திரிந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.

    இம்மாதம் 24-ஆம் தேதி வீட்டை ஒட்டிய புளிய மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை, குர்குரே தருவதாகக் கூறி அழைத்துச் சென்ற இந்தக் குற்றவாளிகள், வாயைப் பொத்தி அருகில் உள்ள வயலுக்கு இழுத்துச் சென்று ஒருவர் பின் ஒருவராகக் கொடூரமாகப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர், சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலுடன் கல்லைக் கட்டி கிணற்றில் தூக்கிப் போட்டுவிட்டுத் தப்பியுள்ளனர்.

    இருட்டியும் சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். மூன்றாம் நாள் கிணற்றில் சடலமாகக் கண்டதைக் கண்ட கிராம மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். மாதாபூர் அருகே குற்றவாளிகளைப் போலீசார் கைதுசெய்தனர்.

    இந்தக் குற்றவாளிகளை பாஸ்ட் டிராக் நீதிமன்றம் மூலம் விரைவாகத் தண்டித்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உடனடி நீதி கிடைக்க வேண்டும் என்று ராமகுண்டம் ஆணையர் அம்பர் கிஷோர் ஜா மாவட்ட நீதிபதிக்குக் கடிதம் எழுதவுள்ளதாக மஞ்சிரியால் டி.சி.பி. பாஸ்கர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: #Breaking: கோவை மாணவி கூட்டுப் பாலியல் வழக்கில் திடீர் திருப்பம் - ஆட்டு வியாபாரியை கொன்றதாக குற்றவாளிகள் வாக்குமூலம்!

    மேலும் படிங்க
    அதிகாரிகள் அலட்சியம்: ₹3.25 கோடி இழப்பீட்டை வழங்க தாமதம்! மதுரை வட்டாச்சியர் அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்!

    அதிகாரிகள் அலட்சியம்: ₹3.25 கோடி இழப்பீட்டை வழங்க தாமதம்! மதுரை வட்டாச்சியர் அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்!

    தமிழ்நாடு
    கண்டுபிடித்தால் ₹583 கோடி! 227 பயணிகளின் நிலை என்ன? மாயமான MH370-ஐக் கண்டுபிடிக்க மீண்டும் தீவிரம் - மலேசியா அரசின் இறுதி முயற்சி!

    கண்டுபிடித்தால் ₹583 கோடி! 227 பயணிகளின் நிலை என்ன? மாயமான MH370-ஐக் கண்டுபிடிக்க மீண்டும் தீவிரம் - மலேசியா அரசின் இறுதி முயற்சி!

    உலகம்
     திமுகவுக்கு ஓட்டு கிடைக்காது! திமுகவை வெளியேற்ற ஒரு மாதத்தில் வலுவான கூட்டணி உருவாகும் - வானதி சீனிவாசன் உறுதி

    திமுகவுக்கு ஓட்டு கிடைக்காது! திமுகவை வெளியேற்ற ஒரு மாதத்தில் வலுவான கூட்டணி உருவாகும் - வானதி சீனிவாசன் உறுதி

    அரசியல்
    காமராஜர் பற்றி சர்ச்சை பேச்சு: பிரபல யூடியூபர் மீது நடவடிக்கை கோரி நாடார் அமைப்புகள் புகார்!

    காமராஜர் பற்றி சர்ச்சை பேச்சு: பிரபல யூடியூபர் மீது நடவடிக்கை கோரி நாடார் அமைப்புகள் புகார்!

    தமிழ்நாடு
    2030ம் ஆண்டுக்குள் உலகப்போர் நடக்கும்! 5 வருஷம் தான் இருக்கு!! அதிர்ச்சி கொடுக்கும் எலான் மஸ்க்!

    2030ம் ஆண்டுக்குள் உலகப்போர் நடக்கும்! 5 வருஷம் தான் இருக்கு!! அதிர்ச்சி கொடுக்கும் எலான் மஸ்க்!

    இந்தியா
    சும்மா விட்ராதீங்க!  “திரிணமுல் வன்முறைக்கு பதிலடி கொடுக்குங்கள்!” எம்.பிக்களுக்கு மோடி அட்வைஸ்!

    சும்மா விட்ராதீங்க! “திரிணமுல் வன்முறைக்கு பதிலடி கொடுக்குங்கள்!” எம்.பிக்களுக்கு மோடி அட்வைஸ்!

    இந்தியா

    செய்திகள்

    அதிகாரிகள் அலட்சியம்: ₹3.25 கோடி இழப்பீட்டை வழங்க தாமதம்! மதுரை வட்டாச்சியர் அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்!

    அதிகாரிகள் அலட்சியம்: ₹3.25 கோடி இழப்பீட்டை வழங்க தாமதம்! மதுரை வட்டாச்சியர் அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்!

    தமிழ்நாடு
    கண்டுபிடித்தால் ₹583 கோடி! 227 பயணிகளின் நிலை என்ன? மாயமான MH370-ஐக் கண்டுபிடிக்க மீண்டும் தீவிரம் - மலேசியா அரசின் இறுதி முயற்சி!

    கண்டுபிடித்தால் ₹583 கோடி! 227 பயணிகளின் நிலை என்ன? மாயமான MH370-ஐக் கண்டுபிடிக்க மீண்டும் தீவிரம் - மலேசியா அரசின் இறுதி முயற்சி!

    உலகம்
     திமுகவுக்கு ஓட்டு கிடைக்காது! திமுகவை வெளியேற்ற ஒரு மாதத்தில் வலுவான கூட்டணி உருவாகும் - வானதி சீனிவாசன் உறுதி

    திமுகவுக்கு ஓட்டு கிடைக்காது! திமுகவை வெளியேற்ற ஒரு மாதத்தில் வலுவான கூட்டணி உருவாகும் - வானதி சீனிவாசன் உறுதி

    அரசியல்
    காமராஜர் பற்றி சர்ச்சை பேச்சு: பிரபல யூடியூபர் மீது நடவடிக்கை கோரி நாடார் அமைப்புகள் புகார்!

    காமராஜர் பற்றி சர்ச்சை பேச்சு: பிரபல யூடியூபர் மீது நடவடிக்கை கோரி நாடார் அமைப்புகள் புகார்!

    தமிழ்நாடு
    2030ம் ஆண்டுக்குள் உலகப்போர் நடக்கும்! 5 வருஷம் தான் இருக்கு!! அதிர்ச்சி கொடுக்கும் எலான் மஸ்க்!

    2030ம் ஆண்டுக்குள் உலகப்போர் நடக்கும்! 5 வருஷம் தான் இருக்கு!! அதிர்ச்சி கொடுக்கும் எலான் மஸ்க்!

    இந்தியா
    சும்மா விட்ராதீங்க!  “திரிணமுல் வன்முறைக்கு பதிலடி கொடுக்குங்கள்!” எம்.பிக்களுக்கு மோடி அட்வைஸ்!

    சும்மா விட்ராதீங்க! “திரிணமுல் வன்முறைக்கு பதிலடி கொடுக்குங்கள்!” எம்.பிக்களுக்கு மோடி அட்வைஸ்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share