பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமான இந்தியாவும் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதில் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக தற்போது இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே தாக்குதலுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, எடப்பாடி பழனிசாமி வீடு, சேப்பாக்கம் மைதானம், தமிழக ஆளுநர் மாளிகை, அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

மேலும் இந்தியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக, கோவை விமான நிலையத்தில் தீவிர சோதனைக்கு பின்னர் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: அடிச்ச எல்லா பந்துமே சிக்ஸ் தான்..!! கிரிக்கெட் விளையாடி அசத்திய எஸ்.பி வேலுமணி..!
கோவை விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், மும்பை, டில்லி, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கட்டா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், உள்நாட்டு விமான சேவைகள் வழங்கப்படுகின்றன. கோவையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விமான நிலைய ஆணைய தகவல்களின் படி, கடந்த நிதியாண்டில் அதிகளவாக, கோவையில் இருந்து, 32.53 லட்சம் பயணிகள் பயணம் செய்து உள்ளனர். இது முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில், 12 சதவீதம் அதிகம்.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் அனாதையாக ஒரு பை கிடந்து உள்ளது. இதனை பார்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஏதேனும் வெடிகுண்டு இருக்குமோ? என மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் கொண்டு உடனடியாக அந்த பையை சோதனை செய்தனர். அதன் பின்னர் அந்தப் பையை உள்ளே கொண்டு சென்று ஸ்கேன் செய்தனர். அதில் ஒன்றும் இல்லாததை தெரிந்து கொண்ட மத்திய தொழில் பாதுகாப்புத் படையினர், பின்னர் யாரோ? ஒரு பயணி அந்த பையை விட்டு, விட்டு சென்று இருக்கலாம், யாரேனும் பையை காணவில்லை என்று புகார் கூறினால், அதனை அவர்கள் திருப்பிக் கொடுக்க எடுத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி தீர்ப்பு ஒரு எச்சரிக்கை..! கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து.. திருமாவளவன் ஆவேசம்..!