சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள எழும்பூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாடு அரசியலில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இது தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர், புலியந்தோப்பு, சூலை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்தத் தொகுதி நகர்ப்புற வாக்காளர்கள் அதிகம் கொண்டது. கடந்த பல தேர்தல்களில் திமுகவின் வலுவான கோட்டையாகவே இது கருதப்பட்டு வந்தாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக இங்கு புதிய முகத்தை களமிறக்கியுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தபோது, எழும்பூர் தொகுதிக்கு அபிஷேக் ரங்கசாமி என்பவரை வேட்பாளராக நியமித்தது. அவர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பிறகு, எழும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அபிஷேக் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜெர்மனியில் கோயபல் என்று ஒருத்தர் இருத்தார் என்றும் அவர்தான் கொள்கை பரப்பு அமைச்சர் எனவும் தெரிவித்தார். பொய்யான ஒரு விஷயத்தை மக்களிடம் உண்மை என்று நம்ப வைப்பதே கோயபலின் வேலை என்று கூறிய அபிஷேக், அப்படித்தான் கோபாலபுரத்து கோயபல்ஸ் இருக்கின்றனர் என்று விமர்சனம் செய்துள்ளார். இவ்வளவு கூட்டம் இருக்கிறது., ஆனால் ‘நாங்கள்தான் வெல்வோம்’ என பொய்யான செய்தி பரப்புகின்றனர் என்றும் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: முதல்வரை எதிர்த்து..! தவெக வி.எஸ்.பாபு வேட்பு மனுத் தாக்கல்..!!
திமுகவின் B டீம் ஒன்று உருவாகியிருக்கிறது என்றும் கூறி உள்ளார். அதுதான் குட்டி கோயபல் என்றும் வில்லிவாக்கத்து வில்லன் ஆதவ் என்று காட்டமாக கூறினார். அவர் தவெக தான் சென்னை என சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றும் ஆனால் மக்கள் ஓட்டு இரட்டை இலைக்குத் தான் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசு கஜானாவை ஏடிஎம் ஆக பயன்படுத்தும் திமுக... பணம் எங்க போச்சு முதல்வரே..? பியூஷ் கோயல் சரமாரி கேள்வி..!!