வில்லிவாக்கம் தொகுதியில் நடைபெற்ற அதிமுக வேட்பாளருக்கான பரப்புரையின்போது, லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சித்தார். “ஆதவ் திமுகவின் ஸ்லீப்பர் செல்லாகத்தான் வேலை செய்கிறார்” என்று அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வு தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக அமைந்தது. வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட எஸ்.ஆர். விஜயகுமார் (முன்னாள் எம்.பி.)-க்கு ஆதரவாக ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், திமுக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதேநேரத்தில், தவெக-வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனாவை “திமுகவின் உள்ளார்ந்த ஏஜெண்ட்” என்று குற்றஞ்சாட்டினார்.ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், லாட்டரி மார்ட்டின் என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் மகன். அவரது குடும்பமே அரசியல் ரீதியாக பல்வேறு திசைகளில் செயல்படுவதாக அறியப்படுகிறது.
இதையும் படிங்க: அமித் ஷா மகனுடன் சபரீசனுக்குத் தொடர்பு! அமலாக்கத்துறை மௌனம் காப்பது ஏன் என ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!
அவரது தாயார் லீமா ரோஸ் அதிமுக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் வேட்பாளராக இருந்ததாகவும், குடும்ப உறுப்பினர்கள் வெவ்வேறு கட்சிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த பரப்புரையின் போது ஆதார் அர்ஜுனா கஷ்டப்பட்டு பணக்காரன் ஆகவில்லை என்றும் தனது தங்கையை கட்டி தான் பணக்காரன் ஆனார் எனவும் விமர்சனம் செய்து பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுகவிற்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வருகிறது. திமுக 80 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே பெரிய விஷயம். தவெக சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவும் திமுக வேட்பாளரும் நண்பர்கள். திமுகவும், தவெகவும் ஏ டீம், பி டீம் போல செயல்படுகிறார்கள் என கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் குடும்பமே வந்தாலும் வெற்றி எங்களுக்கே! வில்லிவாக்கத்தில் அதிரடி கிளப்பும் ஆதவ் அர்ஜுனா!