திமுக ஆட்சியில் மா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இழப்பை ஈடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருவதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். விவசாயிகள் தங்களது இழப்பை ஈடு செய்ய கோரிக்கை விடுத்தும் திமுக அரசு செவி சாய்க்கவில்லை என்றும், மா விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை மறுநாள் (ஜூன் 20) கிருஷ்ணகிரியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மா விவசாயிகள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாகவும், விவசாயிகளின் துயரங்களைப் போக்க திமுக அரசு முன்வராத நிலையில் அதனை கண்டித்து கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே ஜூன் 20ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சேலத்துக்கு அடிச்ச ஜாக்பாட்! ஆறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்…

மாங்காய், பழங்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நேரத்தில், மாம்பழக் கூழ் தயாரிப்புக்கு கொள்முதல் செய்வதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ள அவர், மாங்கூழ் தொழிற்சாலைகள் கிலோ ஒன்றுக்கு நான்கு முதல் ஐந்து ரூபாய் மட்டுமே தர முன் வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் எனவும் கூறினார்

நஷ்டத்தில் இருந்து காக்குமாறு கிருஷ்ணகிரி ஆட்சியர் மூலம் மா விவசாயிகள் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, நாடு முழுவதும் மா பயிரிட்டு உள்ள விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு தீர்த்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடனா? ஏன்? தமிழக அரசுக்கு சீமான் கேள்வி!!