அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு கட்சியின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள் ஓட்டு போட்ட விரல் மை காய்வதற்கு முன்னதாக விலை பேசும் விபரீதத்தை இது வரை தமிழ்நாடு கண்டதில்லை. நீதிக்கும் நேர்மைக்கும் மக்களுக்கும் அஞ்சாமல் அடுத்த கட்சியில் அதிரடி ஆபர் குடுத்து ஆள் பிடிப்பது. அதிமுக கட்சியை மட்டுமே குறிவைத்து ஆள் பிடிப்பதை தவெக கட்சியின் ஆயுளை நீடிப்பதை பட்டப் பகலிலே குதிரை பேரம் நடத்துவதை ஜனநாயக கட்சிகள் கடந்து போகும் மர்மம் புரியவில்லை.
விஜயபாஸ்கர் வைகோவும் ஊடகக் கொடுத்த வாக்குமூலம் வெளியான பிறகு, விஜயபாஸ்கர் என்னை அப்ரோச் செய்தார்கள் எனக்கு பிடித்திருக்கிறது சேர்ந்து இருக்கிறேன் என்றார்.பின்னர் பிறழ் சாட்சியாக மாறுகிறார் யாருடைய அழுத்தம் காரணமாக மாறினார்கள் என்பது குறித்தும் கூட ஜனநாயக கட்சிகளுக்கு கேள்வி எழுப்ப மனம் வரவில்லை.
கட்டமைப்பு இல்லாத தவெகாவை காப்பாற்ற அதிகாரத்தை வைத்திருக்கிற விஜய்?ஆஃபர் வழங்குவதால் தவெக கட்சியை காப்பாற்ற முடியும் என நம்புகிறாரா?
மகாராஷ்டிராவில் சிவசேனா, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி,8 கெஜ்ரிவால் போன்ற ஆளுமைகள் இப்போது எங்கே போனார்கள் என விஜய் தெரிந்து கொண்டால் இந்த விசுவாசத்தை விலை பேசும் ஆடுபுலி ஆட்டத்தை விஜய் செய்ய மாட்டார்.
விலைக்கு போகிறவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்வது விளம்பரத்திற்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கும். அதிமுக பொலிட்டிக்கல் பார்ட்டி லீடர்ஸ் மேனுஃபாக்சரிங் பேக்டரி வைத்திருக்கும் கட்சி.அதிமுகவில் இருந்து சென்றவர்கள் அனைத்து கட்சிகளும் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள் பாரதிய ஜனதா கட்சியை நயினார் நாகேந்திரன் தலைமை பொறுப்பில் இருக்கிறார் காங்கிரஸில் திருநாவுக்கரசு திமுகவில் 12 முன்னாள் அமைச்சர்கள் அந்த கட்சியை இருந்தார்கள் ஒன்றை விஜய் தெரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் எல்லோரும் விருப்பப்பட்டு சென்றவர்கள் விலை பேசப்பட்டு சென்றவர்கள் அல்ல.
இதையும் படிங்க: “ஓடுகாலிகளால் ஒருபோதும் அதிமுக அழியாது...” - இடைத்தேர்தலில் தவெகவுக்கு காத்திருக்கும் ஆபத்து... ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்...!
இன்று தவெக கட்சிக்கு விலை போனவர்கள் விசுவாசத்திற்காக தவெகாவிற்கு வரவில்லை விசுவாசத்தை விலை பேசி வந்தவர்கள் என்பது விஜய் தெரிந்துகொள்ள வேண்டும். குதிரை பேரத்தை ஜனநாயக கட்சிகள் வேடிக்கை பார்ப்பது நாளைக்கு உங்களுக்கும் இந்த நிலைமை வரலாம் பக்கத்து வீடுதானே பற்றி எரிகிறது என்று எண்ணாமல் தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும் அணைக்க தவறினால் உங்கள் வீடும் பற்றி எரிகிற நாள் வெகு தொலைவில் இல்லை
அதிகாரத்திற்காக மௌனம் சாதிக்காமல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிற கட்சிகள் இந்த அரைவேக்காட்டு முதல்வர் விஜய்க்கு அரசியல் ஜனநாயகம் என்றால் என்ன என்று நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆண்டவனே சென்றாலும் தட்டிக் கேட்கிற கட்சிகள் இன்னும் தமிழகத்தில் உயிரோட்டமாய் இருக்கிறது என்பது நீங்கள் நிரூபிக்க வேண்டும்
விஜய் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக பேசுகிறார். தூய ஆட்சி தருவதாக பேசுகிறார். அவருடைய நடவடிக்கைகளும் உத்தரவும் எங்கே போகிறது?. சட்டசபையில் செய்கை காண்ப்பிக்கிறார். அதிமுக ஆக்கிரமிக்க அழிக்க நினைக்கிற விஜய் அவர்களே எடப்பாடியார் சாமானியர் என்று நினைத்து அதிமுகவை கைப்பற்ற நினைத்தால் அது நியாயமல்ல தர்மம் அல்ல.
அதிமுகவின் சொந்தம் கொண்டாட அந்த கட்சி தொண்டர்களுக்கு உரிமை உள்ளது. அவரது பிள்ளைகளுக்கு உரிமை உள்ளது. நீங்கள் யார் பெற்ற பிள்ளையோ? எங்களுக்கு தெரியாது. சட்டசபையில் அப்பாவை தேடினீர்கள். பெற்ற அப்பாவையா? வளர்த்த அப்பாவையா?எ ன்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. பெற்ற அப்பாவின் பெயரையும் வளர்த்த அப்பாவின் பெயரையும் சொன்னால் தேடி கண்டுபிடித்து நாங்கள் தருகிறோம். எங்கள் கட்சியை இப்படி நாசபடுத்துகிறாரே ?. பெற்ற அப்பாவே வந்து சொன்னால் கேட்பாரோ என்னவோ காலம் பதில் சொல்லும் என பேசியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் அமலாகிறதா குடியரசுத் தலைவர் ஆட்சி?... விஜய்க்கு செக் வைத்த ஆர்.பி.உதயகுமார்...!