அதிமுக நன்றாக இருக்க வேண்டும், கட்சியினர் அனைவரையும் ஒருங்கிணைந்து பொதுச் செயலாளர் செயல்பட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ,
அந்த பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சென்னையில் கட்சித் தலைமையிடம் வழங்கினார். வேலுமணி,நத்தம் விஸ்வநாதன் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒரே கடிதத்தில் தங்கள் பதவி விலகலை தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று சென்னையில் இருந்து முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கோவை திரும்பினார். கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டியளித்தார். அப்போது தங்களது கடிதத்தில் தெளிவாக சொல்லி இருக்கின்றோம் எனவும், கட்சிக்காக உழைத்தவர்கள். அந்தந்த மாவட்டத்தில் ஜெயலலிதா ,எம்ஜிஆர் காலத்தில் இருந்து உழைத்தவர்கள் எனவும், எடப்பாடியாருக்காக உழைத்தவர்கள் எனவும், இவர்களுக்கு பதவிகள் வழங்கப்படவில்லை.
இதையும் படிங்க: அதிமுகவில் புதிய பூகம்பம்... எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க மறுத்த மூத்த தலைவர்கள்..!
அதனால் நான், நத்தம் விஸ்வநாதன் உட்பட அனைவரும் பதவிகள் வேண்டாம், கட்சியில் சாதாரண தொண்டராகவே தொடர்கின்றோம் என சொல்லி இருக்கின்றோம் என தெரிவித்தார்.
எங்கள் முடிவை தெளிவாக கடிதத்தில் சொல்லி இருக்கின்றோம் எனவும், அதே வேளையில் அதிமுக உறுப்பினராக தொடர்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
அதிமுக மகளிரணி கூட்டத்திற்கு வளர்மதி எப்பொழுதும் கூப்பிடுவார் , ஆனால் நேற்றைய கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என தெரிவித்தார்.ஆனால் நேற்றைய கூட்டத்திற்கு முன்னரே நாங்கள் தலைமையிடம் கடிதம் கொடுத்து விட்டோம் எனவும், அதனால் எங்களை கூப்பிடவில்லை எனவும் தெரிவித்தார்.
நான் சொன்ன ஜாம்பவான்களுக்கு அர்த்தம் வேறு எனவும்,கட்சிக்காக எம்.ஜி்.ஆர் , ஜெயலலிதா காலத்தில் உழைத்தவர்கள், எடப்பாடிக்காக களத்தில் உழைத்தவர்கள், கட்சியை வளர்த்தவர்கள் என்ற கருத்தில் சொன்னேன் எனவும் தெரிவித்தார். பதவி எல்லாம் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் கொடுக்கவில்லை , இதற்கு அவர்களிடமே பதில் கேளுங்கள் எனவும் தெரிவித்தார்.
எங்களை பொறுத்தவரை கடிதத்தில் தெளிவாக சொல்லி இருக்கின்றோம், இன்னும் இந்த கட்சி நன்றாக இருக்க வேண்டும் எனவும், அனைவரையும் ஒருங்கிணைந்து பொதுச் செயலாளர் செயல்பட வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவெகவா..? திமுகவா..? அதிமுகவை கைகழுவும் வேலுமணி..? முக்கிய ஆலோசனை..!