பூத் கமிட்டிகளின் அமைப்பு மற்றும் கழகத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைகள் நேற்று முதல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

முதல் நாளான நேற்று, சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
இதையும் படிங்க: அரைகுறை ஹாஸ்பிட்டல்.. வாய் பந்தா அமைச்சர்.. எங்கபோய் முடிய போகுதோ! இபிஎஸ் வார்னிங்..!

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 3.30 மணிக்கு, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

இந்த நிலையில், இன்று திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பிற்பகல் 3.30 மணிக்கு, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலை, நயினார், பவனை கைது பண்ணுங்க - மதுரை கமிஷனர் அலுவலகத்துக்கு பறந்த புகார்...!