தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் தமிழக வெற்றி கழகம் தனித்து பெரும்பான்மையை எட்டாத நிலையில், கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைத்த பின்னணியில் அதிமுகவின் சில எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவுக்கு ஆதரவு அளித்த சூழலில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் தாராபுரம் தொகுதி எம்எல்ஏ பி. சத்தியபாமா, மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ கு. மரகதம் குமரவேல் மற்றும் பெருந்துறை தொகுதி எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார் ஆகிய மூவரும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து இருக்கின்றனர்.
இந்த மூன்று பேரும் தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் சமர்ப்பித்துள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்திருக்கும் நிலையில் மூன்று பேரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். மூன்று பேரையும் பொதுப்பணி துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

அப்போது, தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்த 15 நாளில் அம்மாவின் ஆட்சியை பார்க்கிறோம் என ஆதவ் அர்ஜுனாவிடம் சத்தியபாமா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் மேலும் சில ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மரகத குமரவேல் தரப்பை மேலும் சில அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்பு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: செய்யாத பணிக்கு 15,80,000-யை ஆட்டையைப் போட்ட அதிகாரி... சிக்கலில் சிக்கிய தவெக அமைச்சர்... ஒப்பந்ததாரர் பகீர் குற்றச்சாட்டு...!
ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைவது பற்றி பேசி வருவதாக கூறப்படுகிறது. மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் தற்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 44 குறைந்திருக்கிறது. மேலும் சில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுவது அதிமுக பலத்தை சட்டமன்றத்தில் மேலும் செயலிழக்க செய்யும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம சொல்லுறாரே...? - தனியார் மருத்துவமனையில் செக் அப் செய்ததற்கு செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்...!