பாஜகவின் தமிழகப் பயணம் 1980களின் முற்பகுதியில் தொடங்கியது. அப்போது இந்தியாவின் பிற பகுதிகளில் வேரூன்றிய இக்கட்சி, தமிழகத்தில் டிராவிட அரசியலின் சவால்களை எதிர்கொண்டது. 1984 லோக்சபா தேர்தலில் வெறும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், 1996இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் சி. வேலாயுதம் என்பவரை எம்எல்ஏ ஆக்கியது அதன் முதல் மைல்கல். இது மிகுந்த சமூக பிரச்சினைகள், குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான மோதல்களைப் பயன்படுத்தியதன் விளைவு.
தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) உருவான 1998க்குப் பின், பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 1999, 2004, 2014 தேர்தல்களில் சில இடங்களைப் பெற்றது. ஆனால், திராவிட இயக்கத்தின் சமூக நீதி, தமிழ் அடையாளம் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான உணர்வுகள், பாஜகவின் வளர்ச்சியைத் தடுத்தன. 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியிலும், பாஜக தனித்து ஒரு தொகுதியை மட்டுமே வென்றது.

இதனிடையே, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் கூட்டணி மீண்டும் அறிவித்தார். தேர்தலுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்திற்கு பாஜக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
இதையும் படிங்க: "அமித் ஷாவைச் சந்திக்க மாட்டேன்!" தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணையாது: டிடிவி தினகரன் திட்டவட்டம்!
சமீபத்தில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த நிலையில், வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வரும் 15ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணி தொடர்பாகவும், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசிப்பார் என கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள சூழ்நிலையில் அமீத் உஷாவின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: திருட்டுத் தேர்தல் ஆணையம்… மோடியும், அமித் ஷாவும் பக்கா திருடர்கள்…! ஆ.ராசா கடும் விமர்சனம்..!