கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்க கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பரில் பிரதமர் மோடி பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையை ஒருதரப்பினர் வரவேற்றாலும் மற்றொரு தரப்பினர் விமர்சித்தனர். இதனிடையே பெரிய கரன்சி நோட்டுகளை ஒழிக்க வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுக்குறித்து அவர் பேசுகையில், ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருக்க வேண்டும். ரூ.500 நோட்டுகள் கூட தொடரக்கூடாது. அனைத்து பெரிய கரன்சி நோட்டுகளையும் ஒழித்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும். மக்களுக்குத் தேவையான பொருட்களை இலவசமாக அரசு வழங்கும் அணுகுமுறை என்பது என்னைப் பொறுத்தவரை அதை இலவசம் எனச் சொல்வதே சரியானது இல்லை.
இதையும் படிங்க: பெண்களை குறி வைக்குறாங்க.. சோஷியல் மீடியாவுக்கு கட்டுப்பாடு.. சந்திரபாபு நாயுடு புது ஐடியா!

முன்பு அரசு அதிக நலத்திட்டங்கள் வழங்காது. என்.டி. ராமராவ் காலத்தில் தான் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டது. அப்படித்தான் நலத்திட்டங்கள் தொடங்கின. இப்போது செல்வம் உருவாக்கப்படுகிறது. அதேநேரம் வசதி படைத்தவர்களுக்கும், வசதி இல்லாதவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நலத்திட்டங்கள் அர்த்தமுள்ளதாகவும், சரியான நபர்களுக்குச் சென்று சேர்வதும் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நாடு முழுக்க சாதி வாரிக் கணக்கெடுப்பு, திறன் கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு என மூன்றையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். டேட்டா மிகவும் சக்தி வாய்ந்தது. அதை வைத்துப் பல நலத்திட்டங்களை உருவாக்க முடியும் என்றார்.
இதையும் படிங்க: அசிங்கமா இல்லையா...கட்ட பஞ்சாயத்து ஒரு பிழைப்பா? வறுத்தெடுத்த அன்புமணி