பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5 ஆம் சென்னையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆருத்ரா கோல்ட் மோசடி விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதாகவும், இதனால் ரவுடி ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சென்னையின் நிழல் உலகத்தில் மூன்று குழுக்களுக்கு இடையேயான ஆதிக்கப் போட்டியும் ஒரு காரணமாக இருக்கலாம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் ஜூலை 14 அன்று போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரரான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணனை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரியும் கூறினார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... சிபிஐக்கு மாற்றக் கோரிய பொற்கொடியின் மனு ஒத்திவைப்பு!
தொடர்ந்து,ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ க்கு மாற்றக்கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கினோஸ் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் பொற் கொடியின் மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி உள்ள 26 பேரில் நாகேந்திரன் உட்பட 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த ஜாமின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சுமார் ஓராண்டாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என பொற்கொடி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், பொற்கொடி ஜாமினில் வெளியே வந்தால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: நடத்தையில் சந்தேகம்! மனைவியை கொலை செய்த கணவன்.. பேஸ்புக்கில் அறிவித்த்தால் பரபரப்பு!