முன்னாள் சபாநாயகர் அப்பாவு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். 2021 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றபோது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி வெறும் 0.07 சதவீதமாக இருந்தது என்று தெரிவித்தார்
அந்த நேரத்தில் மாநிலம் மிகவும் கடினமான பொருளாதார சூழலை எதிர்கொண்டிருந்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாடு அற்புதமான முன்னேற்றத்தை அடைந்தது. உலகப் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாகவும், இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதமாகவும் இருந்தபோதிலும், தமிழ்நாட்டின் வளர்ச்சி 11.3 சதவீதத்தை எட்டியதாக கூறியுள்ளார். உற்பத்தித் துறையின் வளர்ச்சி 14 சதவீதம் உயர்ந்தது.

இதன் மூலம் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக உயர்ந்தது என்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் இந்திய ஏற்றுமதியில் 44 சதவீதம் தமிழ்நாட்டின் ஏற்றுமதியாக இருந்தது. இது மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு பெரிய சான்றாகும் என்றார். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மாவட்ட ஆட்சியர் மூலம் ஆண்டுக்கு மூன்று முறை வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தினார். இதன் மூலம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையும் படிங்க: கஞ்சா அடித்து விட்டு விசிலுக்கு ஓட்டு போட்டாங்க..! நல்ல சாவே வராது.! சாபம் விட்ட ஆர்.எஸ். பாரதி..!
தொழில் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது என்று கூறியுள்ளார். இதனால் தமிழ்நாடு முதலீட்டாளர்களின் விருப்பமான இடமாக மாறியது.ஆனால் தற்போதைய நிலைமை வேறுவிதமாக உள்ளது. நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பத்திரிகையாளர்களை அனுமதிக்காமல் நடத்தப்பட்டது என்று தெரிவித்தார் .
ஏற்கனவே கடந்த ஆட்சியில் உருவாக்கப்பட்ட முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அவற்றை தனது ஆட்சியில் உருவாக்கிய திட்டங்கள் போல காட்சிப்படுத்துவதற்காக ரீல்ஸ் போடும் முதல்வருக்கு வெட்கமாக இல்லையா? என்று கேட்டுள்ள அப்பாவு இது மக்களை ஏமாற்றும் செயலாகும் என்றார். மேலும் கடந்த ஆட்சியின் சாதனைகளை தனது பெயரில் காட்டிக்கொள்ள முயற்சிப்பது நேர்மையற்ற அணுகுமுறை என்றும் அதிலும் ஒரு லட்ச ரூபாய் முதலீடு வைத்துள்ள ஒரு சாமானியர் ரூ.10,000 கோடியில் தொழில் முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டை உலுக்கிய அமுதன் கொலை"..! நீதி கேட்டு போராட்டம்..! கொந்தளித்த திமுக..!!